தேனி ,ஜன.5- வைகை அணை உள்ள மீன்வளத்துறை அலுவல கத்தில் நடைபெற்ற கண்மாய்கள் ஏலத்தின் போது இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. பெரியகுளம் வட்டாரத்தில் உள்ள கடம்பன்குளம், புதுக்குளம், பட்டத்திக்குளம், தாமரைக்குளம், வேலன்குளம் உள்ளிட்ட 10 கண்மாய்களில் மீன் பிடிப்பதற்கான ஏலம் வைகை அணை மீன்வளத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற் றது. 10 கண்மாய்களை ஏலம் எடுக்க 837 பேர் விண் ணப்பித்து இருந்தனர். ஏலம் எடுக்க வந்த ஏலதாரர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் அலுவல கத்திற்கு முன்பாக குவிந்ததால் ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கூடினார். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். முதலில் பெரிய குளம் அருகே உள்ள வடகரை வேலன் குளம் கண்மாய் ஏலம் நடைபெற்றது . ஏலம் உள்ள ஆரம்பிக்கப்பட்டு துவங்கிய சமயத்தில் அலுவலகத்திற்கு வெளியே காத்தி ருந்த இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது இருதரப்பினரும் ஒருவரை ஒருவரை தாக்கி கொண்டனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தகராறில் ஈடுபட்டவர்களை கலைக்க முயன்றனர். தகராறில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசா ருக்கும் இடையே தள்ளுமுள்ளு வைகைஅணை மீன்வளத் துறை உதவி இயக்குனர் அலுவலகம் கலவர காட்சியானது. பின்னர் மீன்வளத்துறை அலுவலகம் முன்பாக கூடியி ருந்தவர்களை போலீசார் விரட்டியடித்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதால் கண்மாய் ஏலத்தை மறு தேதி குறிப்பிடப்படாமல் ஏலம் ஒத்திவைக்கப்படுவதாக மீன்வளத்துறையினர் அறிவித்தனர்.