districts

img

ஊதியம் வழங்க கோரி காமராசர் பல்கலை விரிவுரையாளர்கள் தர்ணா

மதுரை, நவ.2- மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரியில் ஒரு பகுதி உதவி ஆசிரியர்  களுக்கும், அனைத்து கெளரவ விரிவுரை யாளர்களுக்கும் அக்டோபர் மாத ஊதி யம் வழங்காததை கண்டித்து மூட்டா கிளை,  கெளரவ விரிவுரையாளர்கள் சங்கம் சார்பில் கல்லூரி முதல்வர் அறை முன்பு  புதனன்று தர்ணா போராட்டம் நடை பெற்றது.  இதில் மூட்டா சங்க மத்திய நிர்வாகி ஏ.டி.செந்தாமரைக்கண்ணன், மண்டல பொறுப்பாளர் ரமேஷ் ராஜ், கிளைத் தலைவர் உ.சுரேஷ் குமார், செயலாளர் எஸ்.ராமசுந்தரம், பொருளாளர் சி.ராஜா, கௌரவ விரிவுரையாளர் சங்க நிர்வாகி  வெள்ளையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.