districts

img

க.பூசாரிபட்டியில் தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தரக்கோரி ஜன.10 சிபிஎம் மறியல்

மதுரை, ஜன.4- க.பூசாரிபட்டியில் தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்  தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஜனவரி 10 அன்று மறியல் போராட்டம் நடை பெறுகிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளர் வி.பி.முரு கன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்டம் செல்லம் பட்டி ஊராட்சி ஒன்றியம் கருமாத்  தூர் ஊராட்சிக்கு உட்பட்ட க.பூசாரி பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.  2016 ஆம் ஆண்டு பெய்த தொடர் மழை யால் பள்ளிக்கட்டிடம் இடிந்து  விழும் நிலையில் இருந்தது. அப்  போது கிராம பொதுமக்கள் மற்றும்  தலைமை ஆசிரியர் ஆகியோர் சார்  பில் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டித்தரக்கோரி மனு  கொடுக்கப்பட்டது. பின்னர் சேதம டைந்த பள்ளிக் கட்டிடம் இடிக்கப் பட்டது. ஆனால் பள்ளிக் கட்டிடம் இடிக்கப்பட்டு 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் புதிய கட்டிடம் கட்டித்  தரப்படவில்லை. இதனால் பள் ளிக்கு மேற்கில் உள்ள ரேசன் கடை  முன் வரண்டாவிலும் தனியார் கட்டி டத்திலும் பள்ளி இயங்கி வரு கிறது. போதுமான இடவசதி இல்  லாததால் வெளியில் உட்கார்ந்து படிக்கின்றனர்.

தரையில் உட் கார்ந்துதான் மதிய உணவு சாப்பிட வேண்டிய நிலை உள்ளது. தற்  போது அடிக்கடி பெய்து வரும்  மழையினால் ரேசன் கடை மற்றும் தனியார் கட்டிடத்திற்கு முன்பு தண்  ணீர் தேங்கி விடுகிறது.  இதனால் சில நாட்களுக்கு முன்பு கோட்டையூரை சேர்ந்த பிரித்திகா என்ற மாணவி குளி ரின் காரணமாக வலிப்பு நோய் வந்து மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். மேலும் பள்ளிக்  குழந்தைகளுக்கு எந்த பாதுகாப்  பும் இல்லை.இதனால் குழந்தை களின் பள்ளிப் படிப்பு கேள்விக்குறி யாக மாறியுள்ளது. எனவே ஊராட்சி  ஒன்றியம் மற்றும் மாவட்ட நிர்வா கம் தலையிட்டு உடனடியாக வேறு பாதுகாப்பான கட்டிடத்திற்கு பள்ளி யை மாற்ற வேண்டும். புதிய பள்ளிக் கட்டிடம் கட்டித்தர போர்க்கால நட வடிக்கை எடுக்க வேண்டும்.  மாவட்ட ஆட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், கல்வித்துறை அதிகாரிகள் ஆகி யோர் இனியும் காலதாமதம் செய்  யாமல் உடனடியாக நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தி பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் கிராம மக் கள் சார்பாக மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே புதிய பள்ளிக் கட்டிடம் கட்டித்தரக்கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜனவரி 10 அன்று கோட்டையூர் விலக்கில் சாலை மறியல் போராட்  டம் நடத்தப்படுகிறது.  இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.