அலங்காநல்லூர், ஜன.10- தை பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல் லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்நிலையில் ஜனவரி 16ம் தேதி அரசு சார்பில் நடைபெறவுள்ள உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக் கான முன்னேற்பாட்டு பணிகள் தொடங்கியது. இந்நிலையில், அலங்காநல்லூர் வாடி வாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி திங்க ளன்று அதிகாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து வாடிவாசலில் வர்ணம் தீட்டுவது, கேலரி அமைப்பது, காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை செய்யுமிடம், காளைகள் நிறுத்தி வைக்கும் இடத்தை தயார் செய்யும் பணிகள் துவங்க உள்ளது.