மதுரை, மார்ச் 22- திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தலைமை தேர்தல் பணிக்குழு அலுவல கத் திறப்பு விழா திமுக மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் கோ.தள பதி தலைமையில் வெள்ளி யன்று அண்ணா நகர் அம் பிகா தியேட்டர் அருகில் உள்ள டுவின்ஸ் திருமண மண்டபம் அருகில் நடை பெற்றது.
நிகழ்ச்சியில் அலுவல கத்தை மதுரை நாடாளு மன்ற வேட்பாளர் சு.வெங்க டேசன் திறந்து வைத்தார். திமுக மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் வி.வேலுச் சாமி, உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் பெ. குழந்தைவேலு, மாநக ராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலா ளர் மா.கணேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாநிலக் குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன், மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன், மதிமுக மாவட்டச் செயலா ளர் எஸ்.முனியசாமி, விசிக வடக்கு மாவட்டச் செயலா ளர் தீபம் சுடர்மொழி, தெற்கு மாவட்டச் செயலாளர் பி.ரவி க்குமார், தி.க மாவட்டத் தலைவர் இரா.லி.சுரேஷ், முஸ்லிம் லீக் தெற்கு மாவட் டத் தலைவர் இருமுக், பி.கே.என்.அப்துல் காதர் ஆலீம், வடக்கு மாவட்டத் தலைவர் டாக்டர் ஏ.கே.முகைதீன், மநீம தென் மண்டலச் செயலாளர் எம். அழகர், பார்வார்டு பிளாக் (வல்லரசு) மாநிலத் தலை வர் பி.என்.அம்மாசி, மநேமக வடக்கு மாவட்டச் செயலா ளர் எம்.ஏ.சீனி முகமது, ஆதி தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் ப.ஆதவன், ஆதி தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் ஆனந்த மகாலட்சுமி, மநேஜக மாவட்டச் செயலா ளர் எம்.இப்ராஹிம், இந்திய தேசிய லீக் மாவட்டச் செய லாளர் எஸ்.சித்திக், காங்கி ரஸ் பேரியக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் புலிகள் கட்சி மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் சு.வெங்கடேசன், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அனைவ ருக்கும் கைத்தறி ஆடை அணிவித்து கௌரவித்தார்.