districts

img

மதுரையில் தோழர் சிங்காரவேலர் நூலகம் திறப்பு

மதுரை, ஜூலை 15-   சுதந்திர போராட்ட வீரர், தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்  தோழர் என். சங்கரய்யா அவர்களது 101 - வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு  தோழர் சிங்கார வேலர் நூலகம் திறப்பு விழா நிகழ்ச்சி வெள்ளியன்று  மகபூப்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்டக்குழு அலுவல கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற் குழு உறுப்பினர் த.செல்வா தலைமை வகித்தார்.  நூலகத்தை மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் திறந்து வைத்தார் .இதில் மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன், மதுரை மாநகர் மாவட்ட செய லாளர் மா.கணேசன்,  மாநகர துணை மேயர் டி. நாகராஜன்,  மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் கே.வசந்தன், அ. ரமேஷ், ஜா. நரசிம்மன், இரா, லெனின், நூலகர் கே.முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.