districts

img

மதுரை மாநகராட்சியில் சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் ‘தமிழ் வாழ்க’ ‘மார்க்சியம் வாழ்க’ என்று கூறி பதவியேற்பு

மதுரை, மார்ச்.2-  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட மதுரை மாநக ராட்சியின் 100 வார்டுகளுக்கான மக் கள் பிரதிநிதிகள் புதனன்று  பதவி யேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில், தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் முன்னிலையில் புத னன்று  நடைபெற்றது. தேர்வு செய் யப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும் உறுதிமொழியுடன் பதவியேற்றுக் கொண்டனர்.  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின்  மாமன்ற உறுப்பினர்கள் செல்லூர் 23-ஆவது வார்டு (அய்யானர் கோவில்)  டி.குமரவேல், மேலப்பொன்னகரம் (ஞானஒளிவுபுரம்) 56-ஆவது வார்டு வை.ஜென்னியம்மாள், ஜெய்ஹிந்து புரம் 80-ஆவது வார்டு(  வீரகாளி யம்மன் கோவில்) டி.நாகராஜன், திருப்பரங்குன்றம் 96 வது வார்டு (ஹார்விபட்டி) நா.விஜயா ஆகியோர் பதவியேற்று கொண்டனர்.  ‘மார்க்சியம் வாழ்க’ உறுதிமொழி ஏற்றுக் கொண்ட பெரும்பாலான உறுப்பினர்கள் ‘உள மாற’ ‘கடவுளறிய’ என்று கூறி பொறுப் பேற்ற நிலையில், சிபிஎம் கவுன்சிலர் விஜயா பதவியேற்பின் போது, ‘‘தமிழ் வாழ்க!’’ ‘‘மார்க்சியம் வாழ்க!’’ என்று கூறியது அனைவர் மத்தியி லும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி யது. நிகழ்ச்சியில் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர், மாநகராட்சி ஆணை யாளர் கார்த்திகேயன் மார்ச் 4 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மேய ருக்கான தேர்தலும், மதியம் 2:30 மணிக்கு துணை மேயருக்கான தேர்தலும் நடைபெறும் என்று தெரி வித்தார். அப்போது மாமன்ற உறுப்பி னர்கள் தவிர்த்து வேறு யாருக்கும் கூட்ட அரங்கில் அனுமதி இல்லை அதேபோல் உள்ளே செல்போன், பேனா போன்றவைகளுக்கும் அனு மதி இல்லை என்று அறிவித்தார். புகைப்படம் எடுக்கத் தடை மாமன்ற உறுப்பினர்கள் பதவி யேற்பதற்கு சம்பிரதாயத்திற்காக வழங்கப்பட்ட பத்திரிகையாளர்கள் அடையாள அட்டை உள்ளே புகைப் படம் எடுப்பதற்கு இரண்டு நபர்  களுக்கு தான் அனுமதி வழங்கப் பட்டது. பார்வையாளர்கள் இடத்திலி ருந்து புகைப்படம் எடுக்கக் கூடாது, செய்தியாளர்கள் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து புகைப்படம் எடுக்கக் கூடாது என்று பெரும் கட்டுப்பாடு களை விதித்திருந்தனர். மதுரை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்புத் துறையில் இருந்து வழங்கப்படும் என்று கூறினர். இதனால் பத்திரிகை யாளர்கள் புகைப்படம் எடுப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.