districts

img

முழு ஊரடங்கு: மதுரையில் வாகனப்போக்குவரத்து குறைவு

மதுரை, ஜன.23-  கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு 4வது வாரமாக தொடர்ச்சியாக ஞாயிறன்று முழு ஊரடங்கு அறிவித்தது. இந்நிலையில் முழு ஊரடங்கு அன்று மதுரை நகர் பகுதியில் 1300 காவலர்களும், புறநகர் பகுதியில் 1700 காவலர்களும் பாதுகாப்பு பணி யில் ஈடுபடுத்தப்பட்டனர்.  மாவட்டத்தில் 22 சோதனை சாவடி கள் அமைத்தும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நடமாட்டத்தை கட் டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.  ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நாள் என்பதால் திருமணம், காது குத்து போன்ற பல்வேறு சுப நிகழ்வு களுக்கு செல்பவர்கள் நிகழ்ச்சிகளுக் கான பத்திரிகைகளுடன் சென்றனர். சுப நிகழ்வுக்கு செல்வதாக பத்தி ரிக்கைகளை காண்பித்து செல்லக் கூடிய நிலையில், கார் போன்ற வாக னங்களில் 7 பேர் வரை நெருக்கமாக பயணிக்கக் கூடிய நிலை காணப்பட் டது. வாகன தணிக்கையின் போது உரிய ஆவணங்களை காண்பித்த பின் னரே அனுமதிக்கப்பட்டனர். ஆவண மின்றி செல்லக்கூடிய நபர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டது.மேலும் ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் நக ரில் முக்கிய சாலைகள் ஆள் நட மாட்டம் இன்றியும் வாகனங்கள் செல் வது  குறைவாகவும் காணப்பட்டது.  சில பகுதிகளில் சுப நிகழ்வு களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலை யில் பொதுமக்கள் நடமாட்டம் அதிக மாக காணப்பட்டது. கோவில் வாசலில் திருமணம் ஞாயிறன்று முகூர்த்த நாள் என்ப தால் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வாசலில் எளிமையான முறை யில் திருமணங்கள் நடைபெற்றன. சமூக இடைவெளியை கடைப் பிடித்து, முகக் கவசங்களை அணிந்து திருமணங்கள் நடைபெற்றன. அதிக அளவு கூட்டங்கள் கூடுவதை தவிர்ப் பதற்காக கோவில் வாசலில் ஒலி பெருக்கிகள் மூலம் காவல்துறை யினர் அறிவுறுத்தினர்.