சின்னாளப்பட்டி, டிச.27- தமிழகத்தில் தற்போது இடிந்து விழும் நிலையில் காணப்படும் பள்ளி கட்டி டங்களை இடிப்பதற்கு தமிழக அரசு உத்த ரவிட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா ரெட்டி யார்சத்திரம் ஒன்றியம் காரமடையில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளி யில் இடிந்து விழும் நிலையில் உள்ள கழி வறை கட்டிடங்களை அங்கு பணியாற்றி வரும் தலைமையாசிரியர் பெலிக்ஸ், தனது சொந்த செலவில் சரி செய்து வருகிறார். மேலும் கரிசல் பட்டி ஊராட்சி தலைவர் பால்ராஜ் தலைமையில் பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானங்களில் புதர் மண்டிக் கிடப்பதை நூறு நாள் வேலை செய்யும் பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்து வருகின்றனர்.