நாகர்கோவில், மே 9- என்டோமெட்ரியோஸிஸ் என்கிற கர்ப்ப பை அகப்படல் நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை முறையில் நிவாரணம் பெற முடி யும் என கோட்டார் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி முதல்வர் கிளாரன்ஸ் டேவி தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாகரீக உலகில் பெண்கள் எச்சரிக்கை யோடு இருக்க வேண்டிய நிலையில் பெண்க ளுக்கான நோய்கள் பெருகி வருகின்றன. அதிலும் கர்ப்ப பை சம்மந்தப்பட்ட நோய்கள் மிகவும் பெருகி வரும் நிலையில் “என்டோ மெட்ரியோஸிஸ்”என்னும் நோய் தற்போது அதிக அளவில் காணப்படுகிறது. என்டோ மெட்ரியோஸிஸ் என்பது கர்ப்பப்பையின் உட்புறத்தில் சுற்றியிருக்கும் திசுவானது கருமுட்டைக் குழாய் சினைப்பை அல்லது சில தொலைதூர உறுப்புகளான இடுப்புப் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள உறுப்புகளில் படர்ந்து, வளர்வதால் ஏற்படு கிறது. என்டோமெட்ரியோஸிஸ் ஏற்பட சரி யான காரணம் இல்லாத போதும் பின்வரும் சில காரணங்களால் என்டோமெட்ரியோ ஸிஸ் உருவாகலாம் என கருதப்படுகிறது. மாதவிலக்கின் போது இரத்தக்கசிவு சரி யான பாதையில் செல்லாமல் பின்னோக்கிப் பாய்ந்து சினைப்பை, கருமுட்டைக் குழாய், இடுப்புப் பகுதி ஊடாகச் செல்வதால் கர்ப்பப்பை உட்புறத்திசு இடம் பெயர்கிறது. குடும்ப வரலாறு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மேலும், கர்ப்ப பையில் நடைபெற்ற அறுவை சிகிச்சை, சிசேரியன் போன்ற காரணங்களால் கர்ப்ப பை திசு இடம் பெயர்கிறது.
அறிகுறிகள்
தனிநபர் ஒவ்வொருவருக்கும் அறிகுறி கள் வித்தியாசமாக இருக்கக்கூடும். மாத விலக்கின் போது அல்லது உடலுறவின் போது வயிறு, முதுகு அல்லது இடுப்பைச் சுற்றி கடுமையான வலி ஏற்படுவது. கூடுத லாக, நீடித்த அல்லது ஒழுங்கற்ற இரத்தப் போக்கு, மலச்சிக்கல் அல்லது வயிற்று பபோக்கு, வயிறு உப்புதல், மலம் கழிக்கும் போது வலி மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருத்தல், சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடல் பிரச்சனைகள், மிகவும் களைப்பாக இருத்தல் மற்றும் குழந்தை யின்மை போன்றவை ஏற்படக்கூடும். இதை அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங் மூலம் என்டோ மெட்ரியோஸிஸ் திசுக்கள் மற்ற இடுப்பு உறுப்புகளுக்குள் இடம் பெயர்ந்தி ருக்கின்றதா என கண்டறிய இயலும்.
சிகிச்சை முறை
வலியை கட்டுப்படுத்தக் கூடிய வலி மாத்திரைகள், ஹார்மோன் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை மூலம் பரவி இருக்கும் திசுக்களை அகற்றுவது மற்றும் முற்றிய நிலையில் கருப்பையுடன் கூடிய கருமுட்டைக்குழாய் மற்றும் சினைப்பை யை நீக்குவதாகும். ஆனால் அறுவை சிகிச்சை மட்டும் இதற்கு தீர்வு அல்ல. வலி அதிகமாக இருக்கும் நிலை யில் பள்ளி கல்லூரிக்கோ அல்லது வேலைக்கோ செல்ல முடியாமலோ அன்றாட பணிகளை செய்ய இயலாத வகை யில் இருப்பின் மருத்துவரை உடனடியாக அணுகுதல் அவசியம். ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு ஆயுர்வேத சிகிச்சை களை மேற்கொள்வதன் மூலம் நிலைமை மேலும் மோசமாகாமல் பார்த்துக்கொள்ள இயலும்.
ஆயுர்வேத சிகிச்சை
ஆரம்பத்தில் ஏற்படும் வலி, இரத்தப் போக்கு ஆகியவற்றிற்கு ஆயுர்வேத சிகிச்சைகள் மூலம் நல்ல தீர்வினை பெற லாம். மாதவிலக்கின் போது இரத்தக்கசிவு சரியான பாதையில் செல்வதற்கும் , கர்ப்பப்பையிலுள்ள திசு வேறு இடங்களில் பரவாமல் தடுப்பதற்கும் ஆயுர்வேத சிகிச்சை முறைகளான வஸ்தி, விரேசனம், போன்றவை ஆயுர்வேத மருத்துவமனை யில் உள்நோயாளிகளாக தங்கி வழங்கும் போது ஹார்மோன் சிகிச்சை, அறுவை சிகிச்சை, கர்ப்பப்பை அகற்றுதல் ஆகிய வற்றைத் தடுத்து மேற்கூறிய பிரச்ச னைகளுக்கு நல்ல தீர்வை பெற இயலும். மேலும் இதனால் ஏற்படும் பக்கவிளை வான குழந்தையின்மை பிரச்சனையும் சரி செய்ய இயலும்.
மேலும் என்டோமெட்ரியோஸிஸ் குறித்து கூடுதலாக தெரிந்து கொள்ள வும் சிகிச்சை பெறுவதற்கும் அரசு ஆயுர் வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்து வமனை பெண்கள் மருத்துவ வெளிநோயா ளிகள் பிரிவினை (அறை எண்.3) அணுக லாம் என அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.