districts

img

பொது வேலைநிறுத்தம்- மறியல் போரில் களம் கண்ட கட்டுமானத் தொழிலாளர்கள் - கே.பி.பெருமாள்,

தேசத்தின் நலனுக்காக கடுமையாக உழைத்து வரும் கட்டுமானத் தொழிலாளர்கள் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் கட்டிடம், அணை கட்டுகள், பாலங்கள், ஆலயங்கள், பள்ளி கள், நினைவுசின்னங்கள், சாலைகள், விமான தளங்கள், மாடமாளிகைகள் என காண்பதெல் லாம் கட்டுமானத் தொழிலாளியின் உழைப்பில் உருவாக்கப்பட்டவை. ஆனால் கட்டுமானத் தொழிலாளியின் உழைப்பை அரசுகள் உதாசீனப்படுத்துகின்றன. கட்டுமான தொழிலாளர்களின் சமூக பாது காப்பை உறுதிப்படுத்த உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை கூர்மை யாக விசாரித்து ஆய்வு செய்த நீதிபதிகள் 12-ஆண்டுகளுக்கு பின் 04-10-2018-ல் வழங்கிய தீர்ப்பில், நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு 60-வயது முடிந்தவருக்கு மாத ஓய்வூதியம் 3 ஆயிரம், தொழிலாளியின் பிள்ளைகளுக்கு 1-ம் வகுப்பு முதல் கல்விநிதி (ரூ.1800-முதல் 10-ஆயிரம் வரை),  இயற்கை மரணம் ரூ.2 லட்சம், குடும்ப ஓய்வூதியம் ரூ.1000, ஓய்வூதியம் பெற்று வரும் தொழிலாளிமரணமடைந்தால் ஈமசடங்கு நிதி ரூ.5ஆயிரம் என உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. அதை தொடர்ந்த  16-09-2019-ல் நடந்த 30ஆவது கட்டுமானத் தொழிலாளர் நலவாரியச் கூட்டத்தில் விவா தத்திற்கு வைக்கப்பட்டு அதிலும் உச்சநீதி ம4ன்ற ஆணைப்படி அனைத்து சலுகைகளும் வழங்க முடிவு செய்யப்பட்டது.

ஆனாலும் தொழிலாளர் துறை கண்டு கொள்ளவில்லை. மேற்குறிப்பிட்டுள்ள பண பயன்களை கட்டுமான தொழிலாளிக்கு வழங்கு வதில் நிதிசுமை இல்லை என்பதையும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் கட்டு மான தொழிலாளர்களின் சேமநலநிதி சுமார் 53-ஆயிரம் கோடிரூபாய் இருக்கிறது என்பதை  மறுக்க முடியாது. தமிழ்நாட்டில் கட்டுமானம் மற்றும் முறைசாரா தொழிலாளர்களுக்கு என 7-நலவாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 17-நலவாரிய பணிகளில் ஈடுபட்டு வரும் ஆணையர்கள், அதிகாரிகள், அலுவலக ஊழி யர்கள், தினக்கூலி பணியாளர்கள், ஆணை யர்களின் ஊர்திகள், ஊர்தி ஓட்டுனர்கள் அலுவலக கட்டிடங்கள் அனைத்தும் கட்டு மான தொழிலாளர் சேமநலநிதியில் இருந்த தான் செலவிடப்படுகிறது. அரசு சல்லிகாசு கூட வழங்கவில்லை. இடைப்பட்ட காலத்தில் உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவு வழங்கியது. கட்டுமான தொழி லாளர்களின் சேமநலநிதி என்பது கட்டுமான தொழிலாளர்களுக்கான பணப்பயனுக்கு மட்டும் செலவிட வேண்டும் என்றும், அதிகாரி களுக்கு ஊதியம் அரசு நிதியில் வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. ஆனால் நீதிபதிகளின் எந்த ஆணையையும் அரசுகள் ஏற்று கொள்வது இல்லை. 

கொரோனா நோய் தொற்றை காரணமாக வைத்து சமூக இடைவெளி என்ற கருத்தை சொல்லி கட்டுமான நலவாரியம் உள்பட அனைத்து நலவாரிய பணிகளும் ஆன்லைன் வழிதான் பதிவு, புதுப்பித்தல் செய்ய வேண்டும் என் அன்றைய அ.தி.மு.க. அரசு தன்னிச்சை யாக தொழிற்சங்க ஆலோசனை இல்லாமல் எடுத்த முடிவால் இன்று ஏழைகட்டுமான தொழிலாளி புதிய பதிவு, புதுப்பித்தல் என செல்லும் போது ஆதாரில் செல்நம்பர் இணைக்க வேண்டும், 2-முறை ஒடிபி  பார்க்க வேண்டும், உங்கள் பெயர் நலவாரியத்தில் இல்லை என பல குறைபாடுகளை கூறி தொழி லாளர்கள் கடுமையான நெருக்கடிக்கு தள்ளப்பட்டுகின்றனர். இதனால் தொழிலாளி எந்த சமூக பாது காப்புதிட்டமும் வேண்டாம் என பதிவு செய்யா மலும், புதுப்பிக்காமலும் லட்சக்கணக்கான தொழிலாளிகள் இருந்து வருகின்றனர். இன்றைய நிலையில் 70 சதவிகிதம் கட்டுமான தொழிலாளர்களும் கைபேசி கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் வழி தான புதிய பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் அனுப்ப வேண்டும் என முடிவெடுத்த அரசு அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க தவறிவிட்டது. புதிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஆனால் சர்வர் திறன் மேம்படுத்த பல லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்ட தாகவும், அதற்கான பணி பல நாட்களாக நடப்பதாகவும் கூறினார்கள். எந்த முன்னேற்ற மும் இல்லை. ஒரே நாடு ஒரே மதம் என்று கூறும் ஒன்றிய பாஜக அரசு கட்டுமான தொழிலாளியின் நலன் களை அனைத்து மாநில அரசுகளும் ஒரே மாதிரி வழங்க வேண்டும் என்றோ அல்லது உச்சநீதிமன்ற ஆணைப்படி அனைத்து சலு கைகளும் வழங்க வேண்டும் என்றோ கூறிய தில்லை. இந்நிலையில் கட்டுமானத் தொழி லாளர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற கேட்டு 2022, மார்ச் 28, 29 பொது வேலை நிறுத்தத்தில் லட்சக்கணக்கானே தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.