districts

img

வெம்பக்கோட்டை அகழாய்வுக் கண்காட்சியைப் பார்க்க இலவசப் பேருந்து வசதி

விருதுநகர், மே 15- வெம்பக்கோட்டை தொல்பொருட்கள் கண்காட்சியை பார்வையிட இலவச பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் இரண்டாம்  கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வரு கின்றன. முதற்கட்ட அகழாய்வில் சுடுமண் உருவங்கள், தங்க அணிகலன், கற்கோ டாரி, பதக்கங்கள், வட்டச் சில்லுகள், புகைப்பான்கள், மாவுக்கல் மணிகள், சங்கு மணிகள், படிக மணிகள், சங்கு வளை யல்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட் கள் கிடைதுள்ளன.அகழாய்வில் கிடைத்தப் பொருட்களை பொதுமக்கள் பார்வையிட கண்காட்சி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. கண்காட்சியைப் பார்வையிட வெம்பக்கோட்டையில் இருந்து விஜ கரிசல்குளத்திற்கு இலவசப் பேருந்து வசதி மாவட்ட நிர்வாகத்தால் செய்யப் பட்டுள்ளது. இந்தக் கண்காட்சி கூடம் மே மாதம் முழுவதும், காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை திறந்து வைக்கப்படும். பொதுமக்கள், தற்கால மற்றும் வருங்கால தலைமுறையினர்கள் அனைவரும் இந்த வெம்பக்கோட்டை இலவச தொல்பொருட்கள் கண்காட்சி யைப் பார்வையிட்டு நம்முடைய பழங்கால நாகரீகத்தையும், தமிழரின் தொன்மையையும் அறிந்து கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.