districts

சட்டக் கல்லூரி மாணவர் விடுதியில் உணவு வசதி

மதுரை, டிச.11-  மதுரையில் உள்ள அரசு  சட்டக் கல்லூரி மாணவர் களுக்கான விடுதியில் உணவு  வசதியை  மாணவர்கள் விரும்பினால் 12 வாரங்க ளில் ஏற்படுத்தி தர வேண்டும்  என உயர்நீதிமன்ற மதுரை  கிளை உத்தரவு பிறப்பித் துள்ளது.

மதுரையை சேர்ந்த மணி பாரதி, மதுரை உயர்நீதி மன்ற கிளையில் தாக்கல்  செய்த மனுவில் கூறியிருந்த தாவது: கடந்த 1974-ம் ஆண்டில் மதுரை சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டது. தமிழ கத்தின் முக்கியமான சட்டக்  கல்லூரியாக இது உள்ளது. இதேபோல நெல்லை சட்  டக்கல்லூரியும் பல ஆண்டு களாக செயல்பட்டு வரு கிறது. இந்த சட்டக்கல்லூரி களில் ஆண்டுதோறும் ஏரா ளமான மாணவ, மாணவி கள் படித்து பட்டம் பெறு கின்றனர்.

பிரபல நீதிபதி கள், வழக்கறிஞர்கள்  உரு வாக்குவதில் மேற்கண்ட சட்டக்கல்லூரிகள் முக்கிய மானவை.  ஆனால் மதுரை சட்டக் கல்லூரியில் உணவு விடுதி  வசதி இல்லை. இதேபோல  நெல்லை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் தங்கும் விடுதி வசதி கிடையாது. இதனால் இந்த கல்லூரிகளில் படிக்  கும் மாணவர்கள் கடும் அவ திக்கு ஆளாகி வருகின்றனர். எனவே 2 கல்லூரிகளி லும் உணவு விடுதி உள் ளிட்ட மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர உத்தரவிடவேண்டும். இவ்வாறு மனுவில் கூறி யிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கள் சீத்தாராமன், செந்தில்  குமார்  அமர்வில் செவ்வா யன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், திருநெல்வேலியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில், மாணவர்கள் நலன் கருதி, உணவு வசதியுடன் மாண வர் விடுதியை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை  சட்ட பல்கலை துணைவேந்த ரின் பரிசீலனையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள் ளது. மதுரையில் உள்ள அரசு சட்ட கல்லூரி, மாண வர்களுக்கான விடுதியில், விடுதி மாணவர்கள் விரும்பி னால், 12 வாரங்களில் ஏற் படுத்தி தர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழ க்கை முடித்து வைத்தனர்.