districts

img

நிலத்தடி நீரை செறிவூட்ட வைகை ஆற்றில் தடுப்பணை அமைக்கும் பணி

மதுரை, பிப்.27-  மதுரை மாவட்டம் ஆரப் பாளையம் பகுதியில் வைகை  ஆற்றின் குறுக்கே நிலத்தடி நீரைச் செறிவூட்டும் வகையில் ரூ.11.985 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்வழி துளைகள் மற்றும் தடுப்பணை அமைக்கும் பணியினை தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண் மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஞாயி றன்று துவக்கி வைத்தார்.  மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வைகை ஆற்றுப்படுகை யில் தொடர் நீர்வரத்து இல்லாத தால் மாநகராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகின் றது. மதுரை மாநகராட்சியின் மக கள் தொகை சுமார் 15 லட்சங் களை தாண்டிய நிலையில், மக்க ளின் தண்ணீர் தேவை அதிகரித்து கோடை காலங்களில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையினை சமாளிக்க ஏதுவாக பல்வேறு நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.  அந்த வகையில், மதுரை நக ருக்கு முன்பு குடிநீர் ஆதாரமாக விளங்கிய ஆரப்பாளையம் தண் ணீர் தொட்டி தடுப்பணை தற் போது பயன்பாடற்ற நிலையில் உள்ளதால், புதிய தடுப்பணை கட்ட தமிழக அரசால் உத்தரவி டப்பட்டுள்ளது. புதிய தடுப்பணையானது ஆரப்பாளையத்தில் 320 மீ நீளத் தில் ரூ.11.985 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. இத்திட்டத் தில் தடுப்பணையின் மேல்புறம் தண்ணீர் நிற்கும் பரப்பில் மூன்று நிலத்தடி செறிவூட்டு துளைகள் அமைத்து நிலத்தடி நீர் மட்டத் தினை உயர்த்தவும் மற்றும் நீரின் உவர்ப்பு தன்மையை மாற்றவும் முடியும்.  தடுப்பணையின் மூலம் 1.36மி.க.அடி தண்ணீர் தேக்க முடி யும். மேலும், 2கி.மீ சுற்றளவில் அமைந்துள்ள ஆழ்துளை கிணறு களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து சுமார் 1.25 லட்சம் மக் கள் பயனடைய வாய்ப்புள்ளது. இத்திட்டத்தில் வெள்ளத் தடுப் புச் சுவர் 105 மீ நீளத்திற்கு கட் டும் பணியும், ஆற்றின் படுகை யை 240 மீ நீளத்திற்கு சீரமைக் கும் பணியும் அடங்கும்  இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சி யர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப் பினர் கோ.தளபதி, மாவட்ட வரு வாய் அலுவலர் கோ.செந்தில் குமாரி, பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை) கண்காணிப்புப் பொறியாளர் சுகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.