districts

img

தூத்துக்குடி மாநகராட்சி, விளாத்திகுளம் பேரூராட்சியில் சிபிஎம் வேட்புமனு தாக்கல்

தூத்துக்குடி - பிப் 2 தூத்துக்குடி மாநகராட்சி, விளாத்திகுளம் பேரூராட்சியில்   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதனன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.      தூத்துக்குடி மாவட்டத்தில்  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாநக ராட்சியில் ஒரு வார்டும், கோவில் பட்டி நகராட்சியில் 5 வார்டுக ளும், காயல்பட்டினம் நகராட்சி யில் ஒரு வார்டும், திருச்செந்தூர் நகராட்சியில் ஒரு வார்டும், விளாத்திகுளம் பேரூராட்சியில் ஒரு வார்டும், புதூர் பேரூராட்சி இரண்டு  வார்டும்  ஒதுக்கீடு செய்யப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டது.  இதைத் தொடர்ந்து  தூத்துக் குடி மாநகராட்சி  43 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் முத்து மாரி  புதனன்று வேட்புமனு தாக்கல்  செய்தார். மேலும் வேட்புமனுத் தாக்கலின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கே. பி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் கே.எஸ்.அர்ச்சுனன், மாநகர் செயலாளர் தா.ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூமயில், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.எஸ்.முத்து, முன்னாள் மாவட்ட செயலாளர் இசக்கி முத்து, குமார வேல், 43 வது வார்டு கிளை செயலாளர் சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் விளாத்திகுளம் பேரூராட்சிக்கு  உட்பட்ட 12 வார்டில் சிபிஎம் சார்பில் விஜய ராணி புதனன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் சிபிஎம் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் பேச்சிமுத்து, புவிராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ராஜா, விளாத்திகுளம் தாலுகா செயலாளர் ஜோதி, ராமலிங்கம், நகர செயலாளர் பால முருகன், திமுக சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, முனியசாமி, வார்டு செயலாளர் ராஜதுரை, அம்மாசி, துலசிபட்டி கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.