மதுரை செப் 20- மதுரை காமராசர் பல்கலைக்கழ கத்தில் பணியாற்றி வந்த தொகுப்பூதிய பணியாளர்கள் 136 பேர் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென பணி நீக்கம் செய்யப் பட்டனர். இவர்கள் மீண்டும் பணி வழங் கக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்க ளில் ஈடுபட்டு வந்தனர். இது சம்பந்த மாக பல்வேறு முறை தமிழக முதல்வ ருக்கும் அரசுக்கும் பல்கலைக்கழக நிர் ்வாகத்திற்கும் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் செப்டம்பர் 20 செவ்வாய்க்கிழமை காலை முதல் பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பாக கொளுத்தும் வெயி லில் தொடர் 72 மணி நேரம் உண்ணா விரத போராட்டத்தை துவக்கினர். காவல்துறை அனுமதி இல்லாமல் உண்ணாவிரத போராட்டம் நடப்பதால் நிழற்குடை க்கு அனுமதி இல்லை என்று மறுத்து விட்டனர். 136 பேரில் பணி நீக்கம் செய்யப் பட்ட ஒருவர் உணவு அருந்தாமல் அறப் போராட்டம் நடத்தி ஏற்கனவே இறந்து விட்டார்.
எனவே எங்களின் வாழ்வாதா ரத்தை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று போ ராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக் கொண்டனர். உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் சாமி யான பந்தல் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் காவல்துறை அனுமதி மறுத்து சாமியானா பந்தல் மற்றும் உபகரணங்களை வேனில் ஏற்றி அனுப்பினர். இந்த போராட்டத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொகுப் பூதியம்- தற்காலபணியாளர்கள் சங்கத் தலைவர் மு.வீரபாண்டி, செயலாளர் நாகராணி , தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மதுரை மாவட்ட செயலாளர் கே.நீதி ராஜா, இரா. தமிழ் ஆகியோர் உட்பட பணியாளர்கள் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டம் நடை பெறும் இடத்தில் பல்கலைகழக நிர்வா கம் விளக்கை அணைத்து வைத்தது.