சிவகங்கை,ஏப்.2- சிவகங்கை மாவட்டம் ஊரக வளர்ச்சி-ஊராட்சி துறை, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு- கண்கா ணிப்புக்குழு கூட்டம் சில திட்டங் களை முழுமையாக செயல்படுத் தாமல் உள்ளது தொடர்பாகவும் விவாதிக்கப்படாமல் கூட்டம் நடந்தது தொடர்பாகவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வீரபாண்டி, மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோர் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பி னர் கார்த்திக் சிதம்பரத்திற்க்கு மனு அளித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் தமிழக முதல்வ ருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறி யிருப்பதாவது: சிவகங்கை மாவட்டம் வளமான மண் உள்ள மாவட்டமாக இருந்தா லும் வறட்சியாக உள்ளது. கண் மாய்கள் நிறைந்த மாவட்டமாக உள்ளது. ஆனால் வறண்டு கிடக்கி றது. சிவகங்கை மாவட்டத்திற்கு ஒதுக்கப்படுகிற நிதி சரியான திசை யில், சரியான முறையில் செலவு செய்யப்படுகிறதா என்று கண்கா ணிப்புக்கு உள்ளாக்கப்பட வேண் டிய செயல்பாடுகள் போதுமான தாகவும் இல்லை.நிதியும் செலவு செய்யப்படாத நிலையும் கவலைப் பட வைக்கிறது. சிவகங்கை மாவட் டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்க ளில் 445 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. சிவகங்கை மாவட் டத்தில் தற்போது வரைக்கும் ஒரு கோடியே 61 லட்சத்து 5987 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஆதிதிராவிடர் மக்களுக்கு 21 லட்சத்து 36 ஆயிரத்து 775 பேர் வேலை செய்திருக்கிறார்கள். மற்ற வர்கள் 84 லட்சத்து 79 ஆயிரத்து 212 பேர் பணி செய்து இருக்கிறார் கள். இதில் பெண்கள் மட்டும் 96 லட்சத்து 57 ஆயிரத்து 316 பேர் ஆகும். 2022-23ஆம் ஆண்டுக்கு மட்டுமே ரூ.22501.53லட்சம் கூலி வழங்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நூறுநாள் வேலைத் திட்டத்தில் 2லட்சத்து 20ஆயிரத்து 259 பேருக்கு வேலை அட்டை வழங்கப் பட்டுள்ளது.
இதில் 1,68,671பேர் மட்டும் வேலை கேட்டு உள்ள னர்.இவர்களில் 5416 பேர் மட்டுமே நூறுநாள் வேலை செய்திருக்கி றார்கள்.சிவகங்கை மாவட்டத்தி லேயே ஒரே ஒரு பொறியாளர் பணி யாற்றுகின்ற முக்குடி ஊராட்சி உள்ளிட்ட ஆறு ஊராட்சிகளில் அரசு நிர்ணயித்துள்ள முழு ஊதி யம் வழங்கப்படுகிறது. பிரதம மந் திரி அவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தில் 2016- 17 முதல் 2021- 22 வரைக்கும் 11,169 வீடுகள் கட்டு வதற்கு நிதி ஒதுக்கப்பட்டு 8,045 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டி ருக்கிறது. 3,124 வீடுகள் கட்டப்பட வில்லை. ஒரு வீட்டிற்கு நிதி ஒதுக் கீடு ரூ.2.40 லட்சம் ஆகும்.3124 வீடு களுக்கான தொகை ரூ.74கோடியே 97லட்சத்து 60ஆயிரம் செலவு செய்யப்படவில்லை. இந்த தொகையை குறிப்பிட்ட காலத்தில் செலவு செய்யாமல் கடந்த காலங்க ளில் இதே துறையில் இருந்து திருப்பி அனுப்பிய நிகழ்வு நடந்தது. அதேபோன்று ஆதிதிராவிட மக்க ளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் செலவு செய்யப்படாமல் திருப்பி அனுப்பிய அக்கிரமம் நடந்தது. இதே மன்றத்தில் அது குறித்து விவா திக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் தெரிவித்துள் ளனர்.