districts

img

வன நிலங்களில் மாடு மேய்க்க தடை உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரி விவசாயிகள் - மலைமாடு வளர்ப்போர் ஆர்ப்பாட்டம்

தேனி, மார்ச் 9- வன உரிமை சட்டம் 2006 -ஐ கணக்கில் கொள்ளாமல் வனப்பகுதிகளில் மலை மாடு கள் மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்ட நீதி மன்ற உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும். இதில் தமிழக அரசு உடனடியாக மேல்முறை யீடு செய்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கர்னல் பென்னிகுக் பாரம்பரிய மலை மாடு வளர்ப்போர் சங்கம் சார்பில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த  தனிநபர் தொடர்ந்த வழக்கில் தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளில் மலை மாடுகள் மேய்ச்சலுக்கு நீதிமன்றம் தடை விதித்துள் ளது. இதனால் மலை மாடுகளுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு, அழியும் சூழல் உள்ள தால் தமிழக அரசு இதில் உடனடியாக தலை யிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில், 300க்கும் மேற்பட்ட மாடு வளர்ப்போர்கள் கலந்து கொண்டனர்.‌ ஆர்ப்பாட்டத்திற்கு மலை மாடு வளர்ப்போர் சங்க தலைவர் கென்னடி தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன், மாவட்ட செயலாளர் டி.கண்ணன், சங்க  நிர்வாகிகள் எஸ்.கே.பாண்டியன், இ.மூக் கையா, ஏத்திலாவுலு உள்ளிடோர் கலந்து கொண்டனர். வன உரிமை சட்டத்திற்கு எதிரானது ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கத் தின் மாநிலக்குழு உறுப்பினர் ராஜப்பன், வனத்திற்குள் மலை மாடுகள், நாட்டு மாடு களை மேய்க்க உயர்நீதிமன்றம் தடை  விதித்திருப்பது, 2006 வன உரிமை சட் டத்திற்கு எதிரானது. வரலாறு, பண்பாடு, கலாச்சாரத்திற்கு எதிரானது. எனவே நாட்டு மாடுகளை வனப்பகுதிகளில் மேய்ப்பதற்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்திட வேண்டும், ஜல்லிக்கட்டு, ரேக்ளா, உழவுக் காளைகளின் இனப் பெருக்கத்தை தடை செய்யும் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மாவட்டச் செயலாளர் கண்ணன் பேசும்போது, மலை மாடு விவசாயிகள் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு தமிழக அரசு தலையிட வேண்டும். தவறும் பட்சத்தில் மலை மாடுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என்றார்.