ஒட்டன்சத்திரம், ஜன.12- ஒட்டன்சத்திரம் பகுதியில் பச்சை மிளகாய் அமோகம் விளைச்சல் அடைந்துள்ள நிலையில் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை யடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம், இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிரா மப்பகுதிகளில் அதிகளவு விவசாயி கள் பச்சை மிளகாய் பயிரிட்டு நன்கு விளைச்சல் அடைந்துள்ளது. இந்நிலையில் பச்சை மிள காயை விவசாயிகள் அறுவடை செய்து ஒட்டன்சத்திரம் காந்தி காய் கனி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கிறார்கள். உள்ளுர் வியாபாரிகள் ஆந்திரா மாநிலம் குண்டூரிலிருந்து சம்பா மிள காய்களை மொத்தமாக வாங்கி வந்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட் டுக்கு கொண்டு வந்து தரம் பிரித்து கேரளாவிற்கு அதிகளவு அனுப்பி வருகிறார்கள். இதானல் உள்ளூர் பகுதிகளில் விளைவிக்கப்படும் பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ. 25-க்குத்தான் வியா பாரிகள் வாங்குகிறார்கள். கடந்த நில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ. 50 வரை விற்பனையானது குறிப்பிடத் தக்கதாகும். பச்சை மிளாய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர்.