districts

எல்பிஜி சேமிப்பு முனைய விரிவாக்க பணிகள் துவக்கம்!

தூத்துக்குடி, நவ.  17 தூத்துக்குடி துறைமுகத்தில் இயங்கி வரும் எல்பிஜி சேமிப்பு முனையத்தின் விரிவாக்க பணிகள் துவங்கியது. எஸ்ஹெச்வி எனர்ஜி நிறுவனம், சிங்கப்பூரை அடித்தளமாக கொண்டு இயங்கும் அதன் வர்த்தக செயல்பாட்டுப் பிரிவான S&RM (சப்ளை & ரீசர்ச் மேனேஜ்மெண்ட்) வழியாக இந்தியாவின் தூத்துக்குடி நகரில் அமைந்திருக்கும் அதன் கிரையோஜெனிக் எல்பிஜி (திரவ நிலை பெட்ரோலிய வாயு) சேமிப்பு முனைய கொள்ளளவு வசதியை விரிவு படுத்தியிருக்கிறது. இந்த விரிவாக்கம், முதன்மையாக எஸ்ஹெச்வி எனர்ஜியின் இந்திய துணை நிறுவனமான சூப்பர்கேஸ் மூலம் இந்திய சந்தைக்கு எல்பிஜி விநியோகத்தை உறுதி செய்கிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் அமைந்திருக்கும் இந்த எல்பிஜி சேமிப்பு முனையத்தின் கொள்ளளவு திறன் தற்போதைய 8500 மெட்ரிக் டன்னி லிருந்து, 38500 மெட்ரிக் டன்களாக விரிவு படுத்தப்படுகிறது. இந்திய ரூபாயில் 500 கோடி முதலீடு இதற்காக செய்யப்படும்.

இந்த முனையத்தின் விரிவாக்க செயல் பாடு, எஸ்ஹெச்வி எனர்ஜி – ன் தலைமை செயலாக்க அதிகாரி பிராம் கிராபெர், சூப்பர்கேஸ் நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரி சாந்தனு குஹா ஆகியோர் முன்னிலையில் வியாழனன்று தொடங்கி வைக்கப்பட்டது. வேர்ல்டு எல்பிஜி அசோசியேஷனின் (WLPGA) இயக்குனர்கள் குழுவின் ஒரு உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கும் பிராம் கிராபெர், கூறியதாவது: “தமிழ் நாட்டிலுள்ள எமது வாடிக்கையாளர்கள் எல்பிஜிக்கு கட்டுபடியாகக்கூடியவாறு எளிதான அணுகுவசதியை பெறுவதை உறுதி செய்வதே இந்த எல்பிஜி சேமிப்பு முனையத்தின் கொள்ளளவு திறனை விரிவாக்கம் செய்வதற்கான எமது நோக்க மாகும். அரசு / பொதுத்துறையில் செயல் படுகின்ற எண்ணெய் நிறுவனங்களுக்கு அவர்களுக்குத் தேவைப்படுகின்ற எல்பிஜி மற்றும் சேமிப்பு வசதிகள் ஆகிய இரண்டையும் வழங்குவதற்கு இந்த விரிவாக்கப் பணி எங்களை அனு மதிக்கும். இதன்மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த எல்பிஜி செயல்பாடுகள் வலுப்படுத்தப்படும் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் வசதிகள் திறம்பட மேம்படுத்தப்படும். இந்தியாவின் நீண்டகால ஆற்றல் தேவை கள் பூர்த்தி செய்யப்படுவதை துரிதமாக்க எல்பிஜி உதவும். அத்துடன், நிலக்கரி மற்றும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எண்ணெய் போன்ற அதிக மாசு ஏற்படுத்தும் எரிபொ ருட்களிலிருந்து இந்நாடு விலகி மாறு வதற்கு இது ஆதரவளிக்கும்” என்று குறிப் பிட்டார்.