போதை விழிப்புணர்வு பிரச்சாரம்
திருவில்லிபுத்தூர், ஜுலை 5- நியூஸ்7 தமிழ், அன்பு பாலம் மூலம் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியில் “வேண்டாம் போதை” என்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வத்திராயிருப்பு (பொறுப்பு) காவல் ஆய்வாளர் முத்துக்குமார், வட்டார மருத்துவ அலு வலர் ஜெயராம், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகர், காவல் உதவி ஆய்வாளர் பழனி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது வேண்டாம் போதை என்பதை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாண
மின்சாரம் தாக்கி தனியார் ஒப்பந்த ஊழியர் பலி
விருதுநகர், ஜூலை 5- விருதுநகரில் பணியின் போது மின்சாரம் தாக்கிய தில் தனியார் ஒப்பந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். விருதுநகர்-சாத்தூர் சாலையில் உள்ளது பாலம்மாள் நகர். இங்கு மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடை பெற்றது. அப்போது, எதிர்பாரத விதமாக மின் கம்பி களை இணைக்கும் போது மின்சாரம் தாக்கியதாக கூறப் படுகிறது. இதில் திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த வெயில் செல்வம் (36) என்ற தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மற்றொரு தொழிலா ளியான முத்துராஜ் என்பவர் காயமடைந்தார். காயம டைந்தவரை சக தொழிலாளர்கள் மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து விருதுநகர் பஜார் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.'
மனைவியை வெட்டிய கணவர் கைது
தேனி, ஜூலை 5- கம்பம் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். கம்பம் அருகில் உள்ள சுருளிப்பட்டியை சேர்ந்தவர் பழனிக்குமார் (39). ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி பவித்ரா (27). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள னர். பவித்ரா டெய்லர் கடை நடத்தி வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி 2 பேரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தனது மனைவி கடைக்கு சென்ற பழனிக்குமார் குழந்தைகளை பார்க்க வேண்டும் என கூறி யுள்ளார். அதற்கு பவித்ரா மறுப்பு தெரிவித்து வெளி யேறுமாறு கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பழ னிக்குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பவித்ராவை சரமாரியாக வெட்டினார். படுகாயமடைந்த அவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
மாதர் சங்க தேனி மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு
தேனி, ஜூலை 5- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேனி மாவட்ட 8 ஆவது மாநாடு ஜூலை 30 ஆம் தேதி நடைபெறு வதை முன்னிட்டு போடியில் 55 பேர் கொண்ட வர வேற்புக்குழு அமைக்கப்பட்டது. மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்பு கூட்டம் போடி நகரில் நடத்தப்பட்டது. வரவேற்புக் குழு தலைவராக ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்க தலைவர் எம்.பொன்னையா, செயலாளராக எஸ்.மீனா, பொருளா ளராக பி.சந்திரசேகர் உட்பட 55 பேர் கொண்ட வர வேற்புக்குழு அமைக்கப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.வெண்மணி, மாவட்ட தலைவர் எஸ்.ஈஸ்வரி, மாவட்ட பொருளாளர் பி.சித்ரா, விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன், எஸ்.கே பாண்டியன், விவசாய தொழிலா ளர் சங்க மாவட்ட தலைவர் எல்.ஆர்.சங்கரசுப்பு, சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.ராமச்சந்திரன், சத்துணவு ஊழியர் சங்க தலைவர் ஜெயபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முல்லைப்பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தேனி, ஜூலை 5- மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரியாறு மற்றும் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 127.60 அடியாக உள்ளது. நீர்வரத்து 1414 கனஅடி, நீர் திறப்பு 1655 கனஅடி, இருப்பு 4180 மி.கன அடி. வைகை அணை யின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த நிலை யில் நீண்ட நாட்களுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் உயர தொடங்கி உள்ளது. திங்களன்று 939 கன அடியாக இருந்த நீர்வரத்து செவ்வாய்க்கிழமை காலை 1510 கனஅடியாக அதிகரித்துள்ளது. 53 அடிக்கு கீழ் குறைந்த அணையின் நீர்மட்டம் தற்போது 53.35 அடியாக உள்ளது. பாசனத்திற்காகவும், மதுரை மாவட்ட குடிநீருக்காகவும் 869 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2462 மி.கனஅடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடி யாகவும், சோத்துப்பாறை நீர்மட்டம் 80.36 அடியாகவும் உள்ளது. பெரியாறு 13.6, தேக்கடி 16.8, போடி 0.6 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
வாங்கிய 6 மாதத்தில் பழுதான செல்போன் சேவை குறைபாடு புகாரில் பூர்விகா, ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.2.50 லட்சம் அபராதம்
தேனி, ஜூலை 5- சேவை குறைபாடு புகாரில் பூர்விகா, ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ 2.50 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தேனி அருகே அரண்மனைப்புதூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் காமராஜ் மனைவி மீனா. இவர் கடந்த 20.11.2016 தேதி தனது மகன் திலக் என்பவருக்கு தேனி பழைய பேருந்து நிலையம் அரு கில் உள்ள பூர்விகா நிறுவனத்தில் ரூ. 22,500க்கு ஆப்பிள் போன் வாங்கியுள் ளார். அதற்கு அந்த நிறுவனம் ஒரு ஆண்டு வாரன்டி வழங்கியுள்ளது. வாங்கிய 6 மாதத்தில் செல்போன் வேலை செய்ய வில்லை. அதை பூர்விகா தேனி கிளையில் சரி செய்து கொடுக்கும் படி கொடுத்துள் ளார். அவர்கள் மதுரையில் உள்ள சர்வீஸ் சென்டருக்கு அனுப்பியதில், செல்போன் தண்ணீரில் விழுந்துள்ளதால் கம்பெனி விதிப்படி சர்வீஸ் செய்ய இயலாது என் றும் போனை மாற்றி தர முடியாது என தெரி வித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மீனா, வழக்க றிஞர் கணேசன் என்பவர் மூலம் 20.11. 2017 ஆம் தேதி தேனி நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் தேனி பூர்விகா கிளை மேலாளர், பூர்விகா தலைமை நிர்வாக இயக்குனர், ஆப்பிள் நிறுவனம் ஆகி யோர் மீது வழக்கு தாக்கல் செய்தார். அப்போது ஆப்பிள் நிறுவனம், பூர் விகா தேனி கிளை எங்கள் முகவர் அல்ல என்றும், பூர்விகா நிறுவனம் பல்வேறு நிறுவனங்களில் செல்போன்களை மொத்தமாக வாங்கி கிளைகள் மூலம் விற்பனை செய்வதாக வாதிட்டது. தீர்ப்பு வழக்கு முடிவடைந்த நிலையில் நீதிபதி சுந்தர், மூன்று எதிர்மனுதாரர்கள் சேர்ந்து புதிய ஆப்பிள் போன் அல்லது ரூ. 22,500 வழங்க வேண்டும். முறையற்ற வர்த்தகம் செய்ததற்கு ரூ.50 ஆயிரம் அப ராதம், மன உளைச்சலை ஏற்படுத்தி யதற்கு ரூ.2 லட்சம் மனுதாரருக்கு செலுத்த வேண்டும். வழக்கு செலவுக்கு ரூ.8 ஆயிரம் வழங்க வேண்டும். தவறி னால் 9 சதவீத வட்டியுடன் செலுத்த வேண் டும் என தீர்ப்பு வழங்கியது.
தற்கொலை
திருவில்லிபுத்தூர், ஜூலை 5- இராஜபாளையம் அருகே உள்ள கீழ ராஜகுல ராமனின் வசிப்பவர் முத்து வேல் (40) கூலித் தொழிலாளி. முத்துவேலுக்கு நீண்ட நாட்க ளாக மது பழக்கம் இருந்து வந்ததால் வயிற்று வலி ஏற் பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஆப ரேஷன் செய்வதற்கு தேதி நிச்சயம் செய்யப்பட்டது.இந்நிலையில் இவர் தனது வயிற்று வலிக்கு சித்த மருத் துவரிடம் சென்று வைத்தி யம் பார்த்துள்ளார் இந்த நிலையில் மேலும் இவருக்கு தீராத வயிற்று வலி ஏற் படவே சம்பவத்தன்று இவர் கூமாபட்டியில் வசிக்கும் தனது தாய் வீட்டிற்கு வந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
லஞ்சம் வாங்கிய முன்னாள் ஊராட்சி தலைவருக்கு 2 ஆண்டு சிறை
தேனி, ஜூலை 5- தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிப்புரம் கிராம ஊராட்சி உள்ளது. இந்த ஊராட் சிக்கு உட்பட்ட டி.புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்வ ராஜ் (53). இவர் கடந்த 2012-ம் ஆண்டு தனது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்காக ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அங்கு ஊராட்சி மன்ற தலைவியாக சந்திரா (58) இருந்தார். குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று சந்திரா கூறியுள்ளார். லஞ்சம் கேட் டது தொடர்பாக தேனி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம், செல்வராஜ் கூறி னார். பின்னர் ரூ.2 ஆயிரத்துக்கான ரூபாய் நோட்டுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவி செல்வ ராஜிடம் கொடுத்தனர். அவர் அந்த பணத்தை பொட்டிப்புரம் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று ஊராட்சி மன்ற தலைவி சந்திராவிடம் கொடுத்தார். அப்போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சந்திராவை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட தலைமை ஜுடிசி யல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத் தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு தீர்ப்பளித்தார். லஞ்சம் வாங்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா வுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை யும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
டி.என்.பி.எல் கிரிக்கெட் திண்டுக்கல் அணி அபார வெற்றி
நத்தம், ஜுலை 5- டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 9-வது லீக் ஆட்டம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர் கல்லூரியில் நேற்றுநடைபெற் றது. இதில், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக் கல் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து திருப்பூர் அணி களமிறங்கி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக் கெட்டுகளை இழந்து 145 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் அரவிந்த் அதிகபட்சமாக 23 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். திண்டுக்கல் தரப்பில் அதிகபட்சமாக சிலம்பரசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி னார். இதையடுத்து, 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி 18.1 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 148 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய திண்டுக்கல் அணி யின் விஷால் 57 பந்துகளில் 84 ரன்களும், மணி பாரதி 29 பந்துகளில் 38 ரன்களும் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்த னர். திருப்பூர் தரப்பில் அந்த அணியின் முக மது ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
இளம் வழக்கறிஞர்களுக்கு சிறப்பு சலுகை
மதுரை, ஜூலை 5- நீதிபதி ஜி. ஆர். சாமிநாதன் வழக்கறிஞர் களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: சில நாட்களுக்கு முன்பாக வழக்கறிஞர் ஒரு வர் தனது வழக்கை அடுத்த நாள் ஒத்திவைக்கு மாறு கூறினார். காரணம் கேட்ட பொழுது தனது குழந்தையை 3.30 மணிக்கு பள்ளியில் இருந்து அழைத்துச் செல்ல வேண்டி இருப்பதால் தன்னால் நான்கு மணிக்கு வழக்கில் ஆஜராக இயலாது என குறிப்பிட்டார். இந்த சம்பவம் மேலும் சிந்திக்கச் செய்தது. என் முன்பாக பல இளம் தாய்மார்கள் வழக்க றிஞர்களாக பயிற்சி செய்து வருகின்றனர். அவர்களுக்கும் இதே சிரமங்கள் இருக்கக் கூடும். அவர்களை கருத்தில் கொள்வதும் எனது கடமை. அத்தகைய நபர்கள் நீதிமன்ற அலுவலர்களிடம் முன்கூட்டியே முறையிட்டு அவர்களுக்கு பொருத்தமான நேரத்தை குறிப்பிடலாம். ஆனால் இது தனியாக பயிற்சி செய்யும் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே பொருந்தும். குழுவாக பணியாற்றும் வழக்கறி ஞர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது. இந்த நடைமுறை செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
'