மதுரை, ஜூலை 15- ரயில் பணி நியமன ஆணையம் மற்றும் ரயில்வே தேர்வாணைய பிரிவு (RRB, RRC) தேர்வுகள் நடத்தி ரயில்வேயில் உள்ள லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் .ஒட்டன்சத்தி ரத்தில் கேட் கீப்பரை தாக்கிய சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், ரயில்வே ஊழியர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பாது காப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும். மதுரை கோட் டத்தில் உள்ள பிட்லைன் சரி செய்திட வேண்டும் என்று வலியுறுத்தியும் ஒன்றிய மோடி அரசு இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை பறிக்கும் நடவடிக்கையைக் கண்டித்தும் தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் ( சிஐடியு) சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை ரயில் நிலையம் மேற்கு நுழைவு வாயில் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை கோட்டப் பொருளாளர் பி. சரவணன் தலைமை வகித் தார். துணை பொதுச்செய லாளர் என். கார்த்திச்சங்கிலி முன்னிலை வகித்தார், துணை பொதுச்செயலாளர் எம். சிவக்குமார், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் இரா. லெனின், ஏஐஎல்ஆர் எஸ்ஏ கோட்ட இணை பொ துச்செயலாளர் ஆர். கண் ணன், டிஆர்இயு கோட்ட இணைச் செயலாளர் ஆர். சங்கரநாராயணன் ஆகி யோர் பேசினர். கோட்ட துணைத்தலைவர் பி. வினோத் பாபு நன்றி கூறினார்.