நாகர்கோவில், அக்.27- குமரி மாவட்டம் பளுகல் பேரூராட்சி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற வார்டுகளில் மக்களை பழிவாங்கும் விதமாக வளர்ச்சிப்பணிகள் புறக்கணிக்கப் படுவதாக கூறி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் விள வங்கோடு தாலுகாவில் கேரளத்தை ஒட்டி உள்ளது பளுகல் பேரூராட்சி. கடந்த ஆண்டு நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்த லில் சிபிஎம்-6 வார்டுகளில் வெற்றி பெற்றது. 4 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. திமுக தலைவர் பதவியை கைப்பற்றியது, 3 உறுப்பினர்களைப் பெற்றிருந்த பாஜக வுக்கு துணை தலைவர் பதவி வழங்கப் பட்டது. காங்கிரஸ் கட்சியின் 2 உறுப்பி னர்களும் 2 சுயேச்சை உறுப்பினர்களும் திமுகவுக்கு ஆதரவளித்து வருகின்றனர். பாஜக போட்டி வேட்பாளராக நின்று வெற்றிபெற்ற சுயேச்சை உறுப்பினர் எதிர்க் கட்சி வரிசையில் சிபிஎம்முடன் உள்ளார். இந்நிலையில் எதிர் கட்சி உறுப்பினர்க ளை பழிவாங்கும் நோக்கத்துடன் வளர்ச்சிப்பணிகளில் பாரபட்சம் காட்டப்படு வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. வகுப்புவாத எதிர்ப்பு நிலையில் உறுதியாக நிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் அக்கட்சிக்கு வாக்களித்த மக்களையும் பழி வாங்கும் நடவடிக்கையை கைவிட்டு சீரான வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள வலி யுறுத்தி அக்டோபர் 26 புதனன்று பளுகல் பேரூராட்சி அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் பளுகல் வட்டார செயலா ளர் சங்கர் தலைமை வகித்தார். சிபிஎம் மூத்த தலைவர் கே.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.அனந்தசேகர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பேசினர். ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.