districts

img

இலவச வீட்டுமனை பட்டா கோரி ஆர்ப்பாட்டம்

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரி திண்டுக்கல்லில் காதுகேளாதோர், வாய் பேசாதோர் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் முருகேசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ஜெயந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.