districts

img

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

மதுரை, மே 29- தமிழ்நாடு முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் வழங்க வலி யுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழி யர் சங்கத்தின் சார்பில் மதுரை, தேனி, சிவகங்கை ஆட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்ற ஆர்ப்  பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஆ.அமுதா, மாவட்டப் பொரு ளாளர் பி. சந்திரபாண்டி, மாவட்ட இணைச் செயலாளர் என்.விசா லாட்சி, எஸ். பாண்டி செல்வி, தமிழ்  நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க.நீதிராஜா, சிஐடியு  மாவட்டச் செயலாளர் இரா.லெனின், மாதர் சங்க மாநிலச் செய லாளர்கள் எஸ்.கே.பொன்னுத் தாய், ஆர்.சசிகலா, தமிழ்நாடு அரசு  அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் சு. கிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்டச் செயலாளர் எஸ். பி.  இளங்கோவன் நிறைவு உரை யாற்றினார், ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ஆட்சியரிடம் சத்து ணவு ஊழியர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

தேனி

தேனி ஆட்சியர் அலுவலகம்  முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டத் தலைவர் பி. ரவி தலைமை வகித்தார். மாநி லத் துணைத் தலைவர் பே.பேயத் தேவன், மாவட்டச் செயலாளர் சி.பவானி, மாவட்டப் பொருளாளர் சி.லட்சுமி. அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் பொ.அழகுராஜா, ஓய்வு பெற்ற  அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் கே.துரைராஜ், சிஐடியு தேனி  மாவட்டத் தலைவர் டி.ஜெய பாண்டி உட்பட ஏராளமான சத்து ணவு ஊழியர்கள் கலந்துகொண்ட னர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற போராட் டத்தில் போராட்டம் நடைபெற்றது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முபாரக் அலி, சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

சிவகங்கை

சிவகங்கையில் மாவட்ட  அமைப்பாளர்கள் அ.பாண்டி, கற்பகவள்ளி ஆகியோர் தலை மையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் பாலசுப்பிரமணியன், பாண்டிமாதேவி செல்வராணி, பாண்டிமாதேவி, பாலுச்சாமி, கோமதி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ராதா கிருஷ்ணன், மாவட்டத் தலைவர்  கண்ணதாசன், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் வேலுச்சாமி, பாண்டி, சீமைச்சாமி,கண்ணுச்சாமி, சாலைப்பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் முத்தையா, சின்னப்பன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.