மணிப்பூரில் பழங்குடி மக்கள் மீது நடைபெறும் வன்முறையைக் கண்டித்துக் கொடைக்கானலில் பழங்குடியின மக்கள் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க திண்டுக்கல் மாவட்டத் தலைவர் எம்.செல்லையா, மாவட்டச்செயலாளர் தா.அஜாய்கோஷ், மாநிலக்குழு உறுப்பினர் பொன்னுச்சாமி, காளியப்பன், ஈஸ்வரன், குருசாமி, வேல்முருகன், பாக்கியராஜ், தங்கராஜ் உட்பட 16 மலைக் கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் பங்கேற்றனர்.