districts

img

விசாரணையில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு காவல்துறையை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜன. 18-  நாமக்கல் மாவட்டம் சேந்த மங்களம் காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளி பிரபாகரன் என்பவரை விசாரணை என்ற பெயரில் அழைத்துச்செல்லப் பட்டு உயிரிழந்தார்.  காவல்துறை யினரைக் கண்டித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கம் சார்பில்  ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மதுரை மாநகர் ஜெய்ஹிந்த் புரம், ஜீவா நகர் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் டி. நாகராஜ்  தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர்  மா.கணே சன், சங்கத்தின் மாநிலச் செய லாளர் பி. ஜீவா ஆகியோர் கண் டன உரையாற்றினர். மாவட்ட நிர்வாகிகள் டி. குமரவேல், ஏ. பாண்டி, பாலமுருகன், தங்வேல்  மாவட்ட பொறுப்பாளர் அ. ரமேஷ் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.   இராஜபாளையம் விருதுநகர் மாவட்டம் இராஜ பாளையத்தில் பஞ்சு மார்க்கெட் பகுதியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு நகரத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் நாகராஜ்,  மாவட்ட உதவித் தலைவர் சுப் பிரமணியன், நகரச் செயலா ளர் பாக்கியராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ஐயப்பன் ஆகி யோர் பேசினர்.