கடமலைக்குண்டு, ஏப்.16- தேனி மாவட்டம், கடமலைக்குண்டு பகுதியில் வெள்ளிமலை வனப் பகுதி யில் பெய்த கனமழையின் காரணமாக கடந்த வாரம் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டது. நீர்வரத்தால் கடமலைக்குண்டுவில் மூலவைகை ஆற்றின் குறுக்கே 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிகள் பாதியில் நிறுத் தப்பட்டுள்ளது. கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும்படி இருக்கும் தடுப்ப ணையில் ஆற்றின் தண்ணீர் தேங்கி வழிந்தோடுகிறது. இந்தநிலையில் பள்ளி கள் விடுமுறை என்பதால் தடுப்பணையில் தேங்கியுள்ள நீரில் கடமலைக் குண்டு பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள் அபாயகரமான முறையில் குளித்து வருகின்றனர். தடுப்பணையில் தேங்கியுள்ள நீரில் சில பகுதிகள் மிக ஆழமானதாக உள்ளது. அந்த பகுதிகளில் சிறுவர்கள் தெர்மாகோல் மற்றும் மரக்கட்டைகளை பயன்படுத்தி ஆபத்தான முறையில் குளித்து வருகின்றனர். தடுப்பணையில் விபரீதம் நடைபெறுவதற்கு முன்பாக அந்த பகுதிக்கு யாரும் செல்லாதவாறு தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.