districts

img

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி மதுரையில் சிபிஎம் பேரணி

மதுரை, மார்ச் 15-  திரிபுரா மாநிலத்தில் கம்யூனிஸ்டுகளை தாக்கும் பாஜக குண்டர்களைக் கண் டித்தும். ஒன்றிய பாஜக அர சின் மக்கள் விரோத பட் ஜெட்டை கண்டித்தும். சமை யல் கேஸ் விலை உயர்வை  திரும்ப பெற வலியுறுத்தியும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மேற்கு -1 ஆம் பகுதிக்குழு சார்பில் புதனன்று பேரணி நடைபெற்றது. சம்மபட்டிபுரம் மெயின் ரோட்டில்  இருந்து சொக்க லிங்க நகர் வரை நடைபெற்ற பேரணிக்கு பகுதிக்குழு செய லாளர் கு. கணேசன் தலை மை வகித்தார். பேரணியை மாவட்டச் செயலாளர் மா. கணேசன் துவக்கி வைத்து பேசினார். மாநிலக்குழு உறுப்  பினர் இரா.விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜா. நரசிம்மன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏ. பி. சிவராமன், பி. மல்லிகா உள்  பட பலர் கலந்து கொண்ட னர்.