districts

img

ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மதுரை, மார்ச் 3-  ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட் மற்றும் மாமேதை காரல் மார்க்ஸை அவதூறாகப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டி த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மதுரை அலங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  ஒன்றி யச் செயலாளர் எஸ். ஆண்டி சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செ.முத்து ராணி,  மாவட்டக்குழு உறுப்பினர் மலை.கண்ணன் ஆகியோர் பேசினர்.   திண்டுக்கல் மாவட்டம் வத்தல குண்டுவில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் ஒன்றியச்செயலாளர் தெய்வேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ஆஸாத், கே.டி. கலைச்செல்வன் ஆகியோர் பேசினர்.  பரமக்குடியில்  தாலுகாக்குழு உறுப்பினர் பசலை நாகராஜ் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.   மாவட்ட செயற்குழு உறுப் ்பினர்கள் ஆர். குருவேல், மயில் வாகணன், தாலுகா செயலாளர் தி.இராஜா ஆகியோர் பேசினர்.  முதுகுளத்தூரில் அட்வகேட் சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி.காசிநா தரை தாலுகாச்செயலாளர் வி. முருகன், மாவட்டக்குழு உறுப்பி னர் கணேசன் ஆகியோர் பேசினர். இராஜபாளையம் ஜவகர் மைதா னத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு நகர்க்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் அர்ஜு னன், நகரச் செயலாளர் மாரியப் பன் ஆகியோர் பேசினர்.  இராஜபாளையம் மேற்கு ஒன்றி யம் சேத்தூர் பேரூராட்சி கலைய ரங்கம் முன்பு தங்கவேல் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் குருசாமி, மாவட்டக்குழு உறுப்பி னர் ராமர்  ஆகியோர் பேசினர்.  சிவகங்கை மாவட்டம் திருப்பத் தூர் தாலுகா கண்டரமாணிக்கத்தில் தாலுகாக்குழு உறுப்பினர் பாலு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.கே. தண்டி யப்பன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ .ஆர் .மோகன் , தாலுகாச் செயலாளர் ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.முருகேசன்  ஆகியோர் பேசினர்.  திருப்புவனத்தில் ஒன்றிய செய லாளர் அய்யம்பாண்டி தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் உறுப்பினர் கே.வீரபாண்டி, மாவட்டக்குழு உறுப்பினர் ஜெய ராமன், நகர் செயலாளர் ஈஸ்வரன், பூவந்தி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மகாலிங்கம் ஆகியோர் பேசினர்.