தேனி ,ஆக.11- பெரியகுளத்தில் காதலர்கள் சந்தேக மான முறையில் மரணமடைந்த சம்பவத்தி ற்கு நீதி வழங்க வேண்டும். மரணத்திற்கு கார ணமானவர்கள் மீது விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தாலுகா செயலாளர் எம்.வி.முருகன் தலைமை வகித் த்தார் .தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் செல்லக்கண்ணு தொடக்கவுரையாற்றினார் .மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் நிறைவுரையாற்றினார். .மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சு.வெண்மணி, இ .தர்மர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி. இளங்கோவன் ,பி.பிரேம்குமார் மற்றும் தாலுகாகுழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.