தாரிகாமி, “சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட உரிமைகளை பறித்துவிட்டு, இப்பிரதேசம் முழுவதும் பெரும் வளர்ச்சி ஏற்பட்டுவிட்டதாகவும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துவிட்டதாகவும் ஒன்றிய மோடி அரசு மாய்மாலம் செய்கிறது. ஆனால் உண்மையில் எந்தப் புதிய வேலைவாய்ப்பும் ஏற்படவில்லை. அவர்கள் சொன்னது போல எந்த வளர்ச்சியும் பதிவாகவில்லை. ஜம்மு-காஷ்மீரின் வேலையின்மை விகிதம் 18.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது தேசிய சராசரியைவிட இரண்டு மடங்கு ஆகும்” என்றும் அம்பலப்படுத்தினார். காஷ்மீருக்கே ஆப்பிள் இறக்குமதியான அவலம் “காஷ்மீர் மாநிலப் பொருளா தாரத்தின் மிக முக்கியமான அம்சம் ஆப்பிள் சாகுபடி உள்ளிட்ட தோட்டக் கலை துறையின் பங்களிப்பு ஆகும். விவசாயத்துறையின் இந்த முக்கியப் பிரிவு மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாராள வர்த்தக உடன்பாடுகளின் விளைவாக வெளி நாட்டு ஆப்பிள்கள் தாராளமாக இறக்கு மதி ஆகின்றன. இதன்விளைவாக காஷ்மீர் ஆப்பிளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் பல்லா யிரக்கணக்கான ஆப்பிள் விவசாயி கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். ஒன்றிய அரசு வெளி நாட்டு ஆப்பிள்களுக்கு இறக்குமதி வரி விதிக்காததன் விளைவாக தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதேசங்களிலிருந்து இந்தியா முழுவதும் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பெரிய அள வில் ஆப்பிள்கள் வந்துகொண்டி ருக்கின்றன. இது காஷ்மீர் ஆப்பிள் விவசாயத்தை கிட்டத்தட்ட நிலைகுலையச் செய்துள்ளது” என்று தனது பிரச்சாரத்தில் அம்பலப்படுத்தி வருகிறார் தாரிகாமி. 370, மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதே இலக்கு! வரலாற்றுச் சிறப்புமிக்க ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் அரசியல் சட்டப்பூர்வமான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் நிலைநாட்டி, மாநில அந்தஸ்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என முழக்கமிடும் அவர், காஷ்மீர் மக்களின் முதல் கோரிக்கை முழக்கமே இதுதான் என்று தமது பிரச்சாரத்தில் பேசி வருகிறார். அவரது உரைக்கும் மக்கள் மீதான அவரது தீராத நேசத்திற்கும் குல்காம் தொகுதி மக்கள் எந்த வேறுபாடுமின்றி உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். மீண்டும் வெல்வார் தாரிகாமி.