districts

img

மதுரையில் சாலையை ஆக்கிரமித்து சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்

மதுரை, மே 30-  மதுரையில் முக்கிய சாலைகளில் கால்  நடைகள் அதிகமாக சுற்றித் திரிவதால் போக்குவரத்து நெருக்கடி மற்றும் விபத் துக்கள் நிகழும் அபாயம் உள்ளது. கடந்த சில தினங்களாக சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் நிகழும்  விபத்துக்கள் மதுரை நகர் பகுதிகளில் சற்று  அதிகரித்துள்ளது. குறிப்பாக சிம்மக்கல், கீழமாசி வீதி, ஓபுளா படித்துறை, அண்ணா  தோப்பு, ஆரப்பாளையம் என்று நகரின் முக்கிய போக்குவரத்து நெருக்கடி மிகுந்த  பகுதிகளிலும் தற்போது வைகை வட கரை, தென்கரை பகுதிகளில் அமைக்கப் பட்டுள்ள அணுகு சாலைகளில் கால்நடை கள் அதிகமாக சுற்றி திரிகின்றன. இதனால்  போக்குவரத்து நெருக்கடி மற்றும் விபத் துக்கள் நிகழ்கின்றன. மாநகராட்சி நிர்வாகம் அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும் அதை கால்நடை உரிமையாளர்கள் கண்டுகொள்ளாத போக்கு தொடர்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அரசு ராஜாஜி மருத்துவமனை பனகல் சாலை ஒரு வழிச் சாலையாக மாற்றப்பட்டது.இதன்பின்னர் வாகனங்கள்,பேருந்துகள் அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறை பகுதி சாலை வழியாக மதிச்சியம் வைகை  வடகரை சாலையில் இருந்து பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல், ஆரப்  பாளையம், தத்தனேரி ஆகிய பகுதிகள்  வழியாக இயக்கப்படுகிறது. இப்பகுதி யில் கால்நடைகள் அதிக அளவில் நடமாடு வதால் வாகனங்கள் செல்வதற்கு பெரும்  சிரமம் ஏற்படுகிறது. அதேபோல் காள வாசல் பகுதியில் இருந்து தேனி செல்லும் முடக்கு சாலை பகுதியில் மேம்பாலம் கட்டு மானப் பணிகள் நடைபெறுவதால் கோச்  சடை வழியாக வாகனங்கள் இயக்கப்படு கிறது. இப்பகுதியிலும் அதிகளவில் கால் நடைகள் இரவு மற்றும் பகல் நேரங்களில் சாலையில் படுத்துக்கொள்கின்றன. இத னால் வாகனங்கள் நிலை தடுமாறி செல் கின்றன.  எனவே மாநகராட்சி நிர்வாகம், கால்  நடைகள் சாலைகளில் திரிவதை கட்டுப்  படுத்தவும் கால்நடை உரிமையாளர்களி டம் கண்டிப்பான முறையில் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வலி யுறுத்துகின்றனர்.