மதுரை, ஜன.6- மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் கொரோனா வைரஸ் மற்றும் ஓமிக்ரான், டெல்டா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் தலை மையில் செவ்வாயன்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் துணை ஆணையாளர் சங்கீதா, நகர்நல அலுவலர் ராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி ஆணையாளர்கள் தட்சிணா மூர்த்தி, அமிர்த லிங்கம், உதவி நகர்நல அலுவலர் தினேஷ் குமார், உதவிச் செயற் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் , சுகாதார அலுவ லர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உடப்ட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதற்கிடையில் ஆட்சியர் அனீஷ்சேகர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தைப் பார்வையிட்டார்.