கடமலைக்குண்டு, மே 18- தேனி மாவட்டம், வருச நாடு முதல் வாலிப்பாறை வரை கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பு புதிய தார்ச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது குறிப்பிட்ட அளவிலான பகு திகள் வனத்துறை கட்டுப் பாட்டில் உள்ளதாக கூறி புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கு வனத்துறை யினர் தடை விதித்தனர். இதையடுத்து மாவட்ட அதிகாரிகள் வனத்துறை யினருடன் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் தார்ச் சாலை அமைக்க அனுமதி கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து வனத்துறை கட் டுப்பாட்டில் உள்ள குறிப் பிட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந் தது. இதனால் சாலை அமைக்காத பகுதிகளில் வாகனங்கள் செல்ல மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது. மேலும் இரவு நேரங்களில் பைக் விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்ச் சாலை அமைத்தும் பொதுமக்க ளுக்கு பயன்பாடு இல்லா மல் காணப்படுகிறது. இதற்கி டையே கடந்த மாதம் வருச நாடு பகுதியில் கனமழை பெய்தது. அதன்காரணமாக தார்ச்சாலை அமைக்கப் படாத பகுதி குண்டும் குழியு மாக மாறியது. எனவே தற்போது அந்தப் பகுதிக ளில் ஆட்டோ, மினி வேன் உள்ளிட்ட சிறிய அளவிலான வாகனங்கள் இயக்க முடிய வில்லை. இதே போல வனத் துறையினரின் தடை காரண மாக தாழையூத்து-கருமலை சாஸ்தாபுரம், காமராஜபுரம்-உரக்குண்டான்கேணி, சிதம்பரவிலக்கு-மண் ணூத்து உள்ளிட்ட ஏராள மான சாலைகள் அமைக்கப் படாமல் உள்ளது. மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வனத்துறை அதி காரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி கடமலை-மயிலை ஒன்றியத்தில் விடு பட்ட பகுதிகளில் புதிய தார்ச் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.