மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த முன்னாள் மாமன்ற உறுப்பினர் தோழர் எஸ். முருகன் அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி வியாழனன்று மேற்கு - 2 ஆம் பகுதிக்குழு 82, 83 வது வார்டு கட்சி கிளைகள் சார்பில் சோலையழகுபுரத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா . விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். பாலசுப்பிரமணியன், மாநகராட்சி துணைமேயர் டி. நாகராஜன்,பகுதிக்குழு செயலாளர் ஏ.எஸ். செந்தில்குமார் மற்றும் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.