விருதுநகர், டிச.6- விருதுநகரில் டாஸ்மாக் கடை களில் பணியிடங்களில் நடை பெறும் மேலாதிக்கத்தை தடுக்கக் கோரி அனைத்து சங்க டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கூறியதாவது : விருது நகர் மாவட்டத்தில் 185 டாஸ்மாக் கடைகளில் 750 பேர் பணிபுரிந்து வருகின்றனர். சமீப காலமாக ஆட்சி அதிகார பின்னணியில் உள் ளோரின் ஆதிக்கம் மேலோங்கி யுள்ளது. மதுக்கூடங்களுடன் இணைந்துள்ள கடைகளை முன்ன றிவிப்பின்றி விதிமுறைகளை மீறி மூடப்படுகிறது. இதனால், அர சுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதில் கரூர் கம்பெனி என்ற முகம் தெரியாத நபர்கள் செயல்படு கின்றனர். மேலும், சில மேற்பார்வையா ளர்கள் பாட்டில் ஒன்றுக்கு ரூ.1.25 தர வேண்டுமென விற்பனையா ளர்களை மிரட்டுகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப் பிட்டுள்ளனர். இதில், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி. வேலுச்சாமி, இணைச் செயலா ளர்கள் ஆர்.பாலசுப்பிரமணியன், எம்.திருமலை, டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் சி.வேல்முருகன், மாவட்ட பொதுச் செயலாளர் குணசேகரன், ஏஐ டியுசி சார்பில் ஜெகதீஸ்குமர், பணி யாளர் சங்க பொது செயலாளர் ராஜா, எஸ்.சி.எஸ்.டி சங்கம் சார்பில் ராஜாபேகன் உட்பட பலர் பங்கேற்ற னர்.