சிவகங்கை, மே 12- சிவகங்கை மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமான குவளைவேலி கிராமத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடை பெற்றது. மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத் தலைவர் லதா அண்ணாத்துரை முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்திற்கு சில நாட்கள் முன்னதாக இப்பகுதியில் வீடு வீடாக சென்று மக்க ளிடம் மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சித் தலைவர் மது சூதனன் ரெட்டி ஒவ்வொரு மனுவாக படித்து பார்த்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து 132 மனுக்கள் மீது உடனடியாக விசாரித்து தீர்வு கண்டார். இப்பகுதியில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைக்க வேண்டும் என்று மக்கள் முன்வைத்த கோரிக்கை அன்றே நிறைவேற் றப்பட்டது .மேலும் மின்மாற்றி ,சாலை வசதி, பேருந்து வசதி, கழிப்பிட வசதி போன்றவைகளை ஏற்படுத்தவும் சாலை சீரமைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது .வரு வாய்த்துறை மூலம் பல்வேறு உதவித் தொகை வழங்கும் திட்டம், வீட்டு மனை பட்டா வழங்குதல், நத்தம் பட்டா மாற்று தல், பட்டா மாறுதல் ஆகியவற்றின் கீழ் 79 பயனாளிகளுக்கு இரண்டு லட்சத்து 27 ஆயிரத்து 500 லட்சம் மதிப்பில் திட்ட பயன்கள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் ரவி, மானாமதுரை வட்டாட்சியர் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.