இராமநாதபுரம், ஜூன் 5- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சியில் மாபெரும் தூய் மைப்பணி முகாம் நடைபெற்றது. இம்முகாமினை வட்டாட்சியர் ஆர்.செந்தில்வேல் முருகன் துவக்கி வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் இலக்கியா ராமு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜென்ஸிராணி, ஊராட்சி செயலர் சித்ரா, கிராம உதவியாளர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் தூய்மைப் பணியாளர்கள், நூறுநாள் வேலைவாய்ப்பு திட்ட பணி யாளர்கள் நகரின் அனைத்து தெருக்களிலும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை சேகரித்தனர்.