districts

img

மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டிற்கு யார் காரணம்?

மதுரை, ஜூன் 19- மதுரையில் ரேஷன்  கடைகளில் தகுதி உள்ள கார்டுதாரர்களுக்கு மண்  ணெண்ணெய் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டு மென மாதர் சங்க மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.லதா, செயலாளர் வை. ஜென்னியம்மாள், பொரு ளாளர் சாந்தி, பி. காசுப் பாண்டி, பி. மல்லிகா, மீனா ட்சி ஆகியோர் குடிமைப் பொருள் வழங்கல் அலுவல ரிடம் திங்களன்று மனு அளித்தனர். மண்ணெண்ணெய் பெறுவதற்கு தகுதி வாய்ந்த கார்டுகள் 3,500 இருந்தால் அதில் 500 கார்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. எஞ்சியுள்ள கார்டுகளுக்கு வழங்கப்படுவதில்லை என்ற புகாரின் அடிப்படை யிலேயே மாதர் சங்கம் இந்த மனுவை அளித்துள்ளது என்  பது குறிப்பிடத்தக்கது. மனுவைப் பெற்றுக் கொண்ட குடிமைப்பொருள் வழங்கல் அலுவலர், “மதுரை மாவட்டத்திற்கு 17 லட்சம் லிட்டர் மண் ணெண்ணெய் வர வேண்டி யது உள்ளது. ஆனால் ஒரு  லட்சத்து 8 ஆயிரம் லிட்டர்  தான் விநியோகம் செய்யப்  படுகிறது. எனவே அனைத்து கார்டுகளுக்கும் மண் ணெண்ணெய் விநியோகம் செய்யப்படுவதில்லை. ஒன்றிய அரசு மண்  ணெண்ணையை முழுமை யாக வழங்கினால் மட்டுமே  அனைவருக்கும் விநியோ கம் செய்ய முடியும். ஒரு சிலிண்டர் பயன்படுத்தும் கார்டுதாரர்களுக்கு மண்  ணெண்ணெய் விநியோ கிப்பது நிறுத்தப்பட்டுள்ளது என்றார். மேலும் அவர் கூறுகை யில், வரும் மாதங்களில் மண்ணெண்ணெய் சப்ளை குறைந்தால் அரை லிட்டர் தான் வழங்க முடியும் என் றார்.