நாகர்கோவில், பிப்.24- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தி னர் யு. மீ கனரக வாகன நிர்வா கத்தின் அடாவடி செயலை கண் டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொருட்களை தலையில் சுமந்து கடைகளில் கொண்டு கொடுக்க பொருட்களின் தன் மைக்கு ஏற்ப சுமட்டு கூலியாக ரூபாய் 5-முதல் ரூபாய் 50-வரை கடை உரிமையாளர்களிடம் இருந்து சுமை தூக்கும் தொழி லாளர்கள் பெற்றுவருகின்றனர். இந்த நடைமுறை நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலை யில் நாகர்கோவிலில் உள்ள யு.மீ லாரி நிர்வாகம் கடந்த 24-01-2022 ஆம் தேதி முதல் சுமை பணி தொழி லாளர்களுக்கு நடைமுறையில் உள்ள கூலியை கொடுக்காமல் தொழிலாளர் விரோத நடவ டிக்கையில் ஈடுபட்டு வருகிறது. யு. மீ நிர்வாகத்தின் செயல் மாவட்டம் முழுவதும் தொழிலா ளர்களின் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை உருவாக்கி யுள்ளது. எனவே, சுமை பணி தொழிலாளர்களுக்கு நடை முறையில் உள்ள மாமூல் என்ற மறிப்பு கூலியை மறுக்காமல் வழங்க வேண்டும் மற்றும் யு. மீ நிர்வாகத்தின் அடாவடி செயலை கண்டித்தும் இந்த கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் சுமைப்பணி தொழிலா ளர் சங்கத்தின் (சி.ஐ.டி.யு) மாவட்ட தலைவர் ஆர். ஐயப்பன் தலைமை வகித்தார், மாநில தலை வர் எஸ்.குணசேகரன், மீன்பிடி தொழிலாளர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் எஸ்.அந் தோணி, கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் கே.பி.பெருமாள், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன், சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.சந்திரா போஸ், சிஐடியு மாவட்ட செய லாளர் கே.தங்கமோகனன், ஆட்டோ சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் எஸ்.பரம சிவன், பிஎஸ்என்எல் ஓய்வு பெற்றோர் நல சங்க செயலாளர் மீனாட்சிசுந்தரம் மற்றும் திரளான சுமை பணி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.