கடமலைக்குண்டு, ஜூலை 5- தேனி மாவட்டம், கோம்பைத் தொழு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சின்னசுருளி அருவி அமைந்துள்ளது. இயற்கை எழில்கொஞ்சும் பகுதியில் உள்ள இந்த அருவிக்கு தமிழகத்தின் பல் வேறு பகுதிகளிலும் இருந்து தின மும் ஏராளமான சுற்றுலா பயணி கள் வந்து செல்கின்றனர். தற்போது மேகமலை வனப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக சின்னசுருளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. அருவிக்கு வரும் சுற்றுலா பய ணிகளிடம் வனத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் 2 இடங்க ளில் நுழைவு கட்டணம் வசூலிக்கப் படுகிறது. ஆனால் அதற்கு தகுந் தாற்போல அருவி பகுதியில் வாகன நிறுத்துமிடம், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட எந்த விதமான அடிப் படை வசதியும் செய்யவில்லை. அருவிக்கு கூட்டம் கூட்டமாக வரும் மதுப்பிரியர்கள் மதுகுடிக்கும் பார் ஆக அருவி வளாகத்தை பயன் படுத்தி வருகின்றனர். மேலும் அருவி அருகே கட்டப்பட்டுள்ள பெண் கள் உடைமாற்றும் அறையையும் மதுகுடிக்கும் கூடாரமாக பயன் படுத்தி வருகின்றனர். குடிகாரர்களின் கூடாரமாக மாறி யுள்ள சின்னசுருளி அருவியில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இதனால் சின்னசுருளி அரு விக்கு வரும் பெண்கள் அச்சம டைந்து உள்ளனர். தினமும் நூற் றுக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சுற்றுலா தலமான சின்ன சுருளி அருவியில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக போலீ சார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பய ணிகள் கோரிக்கை விடுத்துள்ள னர். மேலும் விடுமுறை நாட்களில் போலீசார் மற்றும் வனத்துறை யினர் அருவியில் பாதுபாப்பு பணி யில் ஈடுபட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.