தேனி, ஏப்.3- பெரியகுளம் பாலசுப்ரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழாவில் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். பெரியகுளத்தில் வராக நதியின் தென்கரை யில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பால சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது . வரு டம் தோறும் நடைபெறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த மார்ச் 26-ல் கொடியேற் றத்துடன் துவங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் .. ஒன்ப தாம் நாள் திருவிழாவான தேரோட்டம் மார்ச் 3ந்தேதி நடைபெற்றது. தேரோட்டத்தில் பெரிய தேரில் அறம் வளர்த்த நாயகி உடனுறை ராஜேந்திர சோழீஸ்வரர் உற் சவ மூர்த்தியாக சோமாஸ்கந்தர் பெரிய தேரில் எழுந்தருளினார். சிறிய சப்பரத்தில், அம்மன், விநாயகர் சண்டிகேஸ்வரர் உடன் எழுந்து அருளி னார். இன்னொரு சிறிய சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி னார். தேர் வடத்தினை பெரியகுளம் நகராட்சி சேர்மன் சுமிதா சிவக்குமார் பெரியகுளம் கோட்டாட்சியர் சிந்து உட்பட ஏராளமான பக்தர்கள் திருத்தேர் வடம்பிடித்து இழுத்தனர். தேர் கச்சேரி சாலை வழியாக புறப்பட்டு தெற்கு ரத வீதி வழி யாக சென்று மீண்டும் நிலை அடைந்தது இந்த திருத்தேரோட்டத்தினை காண பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட னர். பெரியகுளம் காவல் துணைக் கண்கா ணிப்பாளர் கீதா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.