மதுரை, ஏப்.13- சிலம்பு மற்றும் அந்தியோதயா விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, அவற்றின் கால அட்டவணையில் சில மாற் றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் கார ணமாக சென்னை செல்லும் பாண்டியன், வைகை விரைவு ரயில்கள், செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு ரயில் ஆகி யவற்றின் கால அட்டவணையிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி ஏப்ரல் 14 முதல் 1 வரை மதுரை - சென்னை பாண்டியன் விரைவு ரயில் (12638) மதுரையிலிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 9.35 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரயில் கொடைக்கா னல் ரோடு, அம்பாத்துரை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே இரவு 9.55, 10.10 மணிக்கு புறப்படுவதற்கு பதி லாக இரவு 10, 10.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.05 மணிக்கு பதிலாக அதி காலை 5.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.
சென்னை - செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் (12661) ஏப்ரல் 14 முதல் திண்டுக்கல், விருதுநகர், திருத்தங்கல், சிவ காசி, திருவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புக்கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே அதி காலை 3.10, 5.15, 5.35, 5.42, 5.58, காலை 6.12, 6.35, 6.48, 7.05, 7.35 மணிக்கு புறப்படு வதற்கு பதிலாக அதிகாலை 3.05, 5.10, 5.30, 5.37, 5.53, காலை 6.07, 6.30, 6.43, 7.00, 7.30 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரயில் வழக்கமான நேரமான காலை 8.15 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். மதுரை - சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் (12636) ஏப்ரல் 14 முதல் மதுரையிலிருந்து காலை 7.05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 7.10 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரயில் சோழவந்தான் ரயில் நிலையத்திலிருந்து காலை 7.25 மணிக்கு புறப்படுவதற்கு பதி லாக காலை 7.30 மணிக்கு புறப்படும். மதுரை - பழனி விரைவு சிறப்பு ரயில் (06480) ஏப்ரல் 14 முதல் மதுரையிலிருந்து காலை 7.20 மணிக்கு புறப்படுவதற்கு பதி லாக காலை 7.25 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரயில் கூடல்நகர், சமயநல்லூர், சோழவந்தான் ரயில் நிலையங்களிலிருந்து முறையே காலை 7.30, 7.38, 7.48 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 7.35, 7.44, 7.52 மணிக்கு புறப்படும் என்று மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் செய்தி வெளி யிட்டுள்ளது.