districts

img

நெல்லை வழியாக செல்லும் சில ரயில்கள் ரத்து

திருநெல்வேலி, ஜன.8- கோவில்பட்டி - கடம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் தற்  போது நிறைவடைந்துள்ளது. இந்த  இரட்டை ரயில் பாதை இணைப்பு  பணிகள் நடைபெற வேண்டி உள் ளது. அதற்காக இந்த பகுதியில் ரயில் போக்குவரத்தில் சில மாற் றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி  ஜனவரி 9 அன்று  இராமேஸ்வரத்தில் இருந்து புறப்  பட வேண்டிய கன்னியாகுமரி விரைவு ரயில் (22622) மற்றும் ஜனவரி 10  அன்று கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் விரைவு ரயில் (22621) ஆகியவை  முழுமையாக ரத்து செய்யப்படு கிறது. மேலும் திருச்சி - திருவனந்த புரம் - திருச்சி இன்டர்சிட்டி ரயில்  கள் (22627/22628) ஜனவரி 11 அன்று முழுமையாக ரத்து செய்யப்படு கிறது. மேலும் பாலக்காடு - திருச்  செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில்  கள் (16731/16732) ஜனவரி 8, 9, 11  ஆகிய நாட்களில் விருதுநகர் - திருச்  செந்தூர் இடையேயும் ஜனவரி 10  அன்று மதுரை - திருச்செந்தூர் இடையேயும் பகுதியாக ரத்து செய்  யப்படும், இது தவிர  ஜனவரி 8, 9, 10 ஆகிய நாட்களில் ஈரோட்டில் இருந்து புறப்பட வேண்டிய திரு நெல்வேலி விரைவு ரயில் (16845) மற்றும் ஜனவரி 9, 10, 11 ஆகிய நாட்களில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய ஈரோடு விரைவு ரயில் (16846) ஆகியவை திண்டுக்கல் - திருநெல்வேலி  இடையே பகுதியாக ரத்து செய்  யப்படுகிறது. ஜனவரி 8 9 10 ஆகிய நாட்களில் தாம்பரத்திலிருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் (20691) மற்றும் ஜனவரி 9, 10, 11 ஆகிய நாட்களில் நாகர்கோவில் இருந்து புறப்பட வேண்டிய தாம்  பரம் அந்தியோதயா விரைவு ரயில்  (20692) ஆகியவை திருச்சி - நாகர்  கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது, கோயம்புத் தூர்- நாகர்கோவில் -கோயம் புத்தூர் பகல் நேர விரைவு  ரயில்  கள் (16322/16321) ஜனவரி 9, 10,  11 ஆகிய நாட்களில் ஈரோடு -  நாகர்கோவில் இடையே பகுதி யாக ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி 9, 10 அன்று புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை விரைவு ரயில் (16730) மற்றும் ஜன வரி 10, 11 அன்று மதுரையிலிருந்து புறப்பட வேண்டிய புனலூர்  விரைவு  ரயில் (16731) ஆகியவை திரு நெல்வேலி - மதுரை இடையே பகு தியாக ரத்து செய்யப்படுகிறது, ஜன வரி 9, 10 அன்று சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய திருச்  செந்தூர் செந்தூர் விரைவு ரயில்  (16105) மற்றும் ஜனவரி 10, 11  அன்று திருச்செந்தூரில் இருந்து  புறப்பட வேண்டிய சென்னை  எழும்பூர் செந்தூர் விரைவு ரயில்  (16106) ஆகியவை திருச்சி -  திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது, ஜனவரி 10 அன்று மைசூரில் இருந்து புறப்  பட வேண்டிய தூத்துக்குடி விரைவு  ரயில் (16236) மற்றும் ஜனவரி 11  அன்று தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய மைசூர் விரைவு  ரயில் (16235) ஆகியவை விருது நகர் - தூத்துக்குடி இடையே பகுதி யாக ரத்து செய்யப்படுகிறது.

ஜனவரி 10 அன்று சென்னை யில் இருந்து புறப்பட வேண்டிய குருவாயூர் விரைவு ரயில் (16127) மற்றும் ஜனவரி 10 அன்று குரு வாயூரில் இருந்து புறப்பட வேண்  டிய சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16128) ஆகியவை திரு நெல்வேலி, தென்காசி, ராஜபாளை யம், விருதுநகர் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு முறையே 160 மற்றும் 125 நிமிடங்கள் கால தாமதமாக திருநெல்வேலி மற்றும் திருச்சி சென்று சேரும்.  ஜனவரி 10 அன்று பெங்களூ ரில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் விரைவு ரயில்  (17235) விருதுநகர், ராஜபாளை யம், தென்காசி வழியாக மாற்று பாதையில் இயக்கப்பட்டு 140 நிமி டங்கள் கால தாமதமாக திருநெல்  வேலி சென்று சேரும், மேலும்  ஜனவரி 10 அன்று திருவனந்தபுரத் தில் இருந்து புறப்பட வேண்டிய  திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில் (22628) 90 நிமிடங்கள் கால தாம தமாக திருச்சி சென்று சேரும், ஜன வரி 10 அன்று சென்னை எழும்பூ ரில் இருந்து புறப்பட வேண்டிய நெல்லை விரைவு ரயில் (12631) மற்றும் முத்து நகர் விரைவு ரயில் (12693) ஆகியவை முறையே 40 மற்றும் 30 நிமிடங்கள் கால தாம தமாக திருநெல்வேலி மற்றும் தூத்  துக்குடி சென்று சேரும்.ஜனவரி 12 அன்று திருச்செந்தூர் - வாஞ்சி  மணியாச்சி சிறப்பு ரயில் (06680) திருச்செந்தூரில் இருந்து 110 நிமி டங்கள் காலதாமதமாக புறப் படும். மேற்கண்ட தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.