சின்னாளப்பட்டி, மார்ச் 13- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி சிறப்பு நிலைப் பேரூராட்சியில் தலைவராக பிரதீபா கனகராஜூம், துணைத் தலைவ ராக ஆனந்தி பாரதிராஜாவும் போட்டி யின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், ஞாயிறன்று 13-ஆவது வார்டு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு சாக்கடை, தண்ணீர் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அரசு மருத்துவமனை யின் அருகில் தம்பித் தோட்டம் பள்ளிக்கு போகும் வழியில் குப்பைகள் கழிவுகள் கொட்டப்படுவதைப் பார்வையிட்டனர். மேலும், அங்கன்வாடி பின்புறம் உள்ள கழிப்பிடம் பயன்பாடில்லாமல் இருப்பதால் அங்கு சிறுவர், சிறுமிகளுக்கான பூங்கா அமைக்க ஏற்பாடு செய்யப்படும். ஆம்பு லன்ஸ் வருவதற்கு வழி ஏற்படுத்தி கொடுக் கப்படும் என்று கூறினர். ஆய்வின்போது, கவுன்சிலர் சாந்தி கணேசன், திமுக பாண்டியன், சரவணன், கதி ரேசன், பாஸ்கரன், தினேஷ், 17-ஆவது வார்டு கவுன்சிலர் ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.