districts

img

திருவில்லிபுத்தூர் அருகே சாலை வசதி, குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்

திருவில்லிபுத்தூர், டிச.16- திருவில்லிபுத்தூர்  அருகே கொத்தங் குளம் கிராமத்தில் மயானம். குடிநீர், சாலை, வாறுகால் வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் வெள்ளிக் கிழமையன்று  சாலை  மறியலில் ஈடு பட்டனர்.  விருதுநகர் மாவட்டம்,திரு வில்லிபுத்தூர் அருகே கொத்தங்குளம் கிராமத்தில் உள்ள ஆற்றங்கரையை இந்த கிராம மக்கள் மயானமாக பயன்படுத்தி வருகின்றனர். அந்த இடத் தின் வழியாக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தங்களது பகுதிக்கு சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப் படை வசதிகள் முறையாக இல்லை என்று கூறி அப்பகுதி மக்கள் வெள்ளிக் கிழமை  வன்னியம்பட்டி - சத்திரப்பட்டி சாலையில் அமர்ந்து மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த திரு வில்லிபுத்தூர் காவல் துணைக் கண்கா ணிப்பாளர் சபரிநாதன்  மற்றும் ராஜ பாளையம் வட்டாட்சியர் ராமச் சந்திரன், மண்டல துணை தாசில்தார் கோதண்டராமன், வட்டார வளர்ச்சி அலு வலர்கள் சிவகுமார் (கிராம ஊராட்சி), சிவகுமார் (வட்டார ஊராட்சி) ஆகி யோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் தற்போது உள்ள  மயானத்தை சரி செய்து கிழக்கு பக்கம் அகலப்படுத்தி உரிய வசதிகள் செய்து கொடுப்பதாகவும் மயானத்தில் பதிக்கப்பட்ட குழாய் அகற்றப்படும் என்றும் அடிப்படை வசதிகளை ஊராட்சி தலைவர் மூலம் முறையாக செய்து கொடுக்கப்படும் என்றும்  மூன்று மாதத் தில் காலத்திற்குள் மக்களின் கோரிக் கைகள் நிறைவேற்றப்படும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மக்கள் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர். போராட்டத்தில் விடுதலை சிறுத் தைகள்  கட்சியின் மாவட்டச் செயலாளர் சதுரகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றிய செயலாளர் சசிகுமார் மற்றும் இசக்கி, வைரமுத்து  உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.