districts

img

விருதுநகரில் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம்

காரியாபட்டி, செப்.16- விருதுநகர் மாவட்டத்தில் முதல்கட்டமாக, காரி யாபட்டி ஒன்றியத்தில் உள்ள 69 அரசுப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காரியாபட்டி அருகே உள்ள மந்திரிஓடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத் தினை  வருவாய்- பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்  மற்றும்   தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு - வர்த்தகத் துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு  ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் இருவரும் மாணவர்க ளுடன் அமர்ந்து காலை உணவருந்தியபடியே அவர்க ளுடன் உரையாடினர்.  இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்  கே.நவாஸ்கனி, சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர்  டாக்டர் ரகுராமன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;