திண்டுக்கல், ஜன.27- 74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திண்டுக்கல் நகர்க்குழு சார்பாக போதைக்கெதிரான ரத்த தான முகாம் நடைபெற்றது. திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். வாலிபர் சங்க மாவட்டச்செயலாளர் கே.ஆர்.பாலாஜி, நகரச்செயலாளர் பிரேம்குமார், நகரத் தலைவர் அஜீத், நிர்வாகிகள் சூர்யா, பி.தினேஷ், ஜான், ஆர். தினேஷ், பத்ரி, இந்திய மாணவர் சங்க மாவட்டச்செய லாளர் முகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ரத்த வங்கி பொறுப்பாளர் மருத்துவர் புவனா மற்றும் பலர் கலந்து கொண்டனர். (நநி)