விருதுநகர், ஜூலை 20- விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர். நகர் பகுதி முதல் ஆவுடை யாபுரம் விலக்கு வரை 4 வழிச் சாலையோரத்தில் அணுகுசாலை அமைக்க கோரி கடையடைப்பு மற்றும் போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் - சாத்தூர் செல் லும் 4 வழிச் சாலையில் உள்ளது ஆர்.ஆர். நகர். இங்கிருந்து ஆவு டையாபுரம் விலக்கு வரையிலான பகுதியில் அணுகுசாலை அமைக் கப்படவில்லை. இதனால், ஆர்.ஆர். நகர் மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விபத்து கள் நிகழ்ந்து பல உயிரிழப்புகளும் ஏற்பட்டன. எனவே, அப்பகுதியில் அணுகுசாலை அமைக்க வேண்டு மென அனைத்துக் கட்சியினரும் பொது மக்களும் கோரிக்கை விடுத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் அணுகுசாலை அமைக்க கோரி நடைபயணம் நடத்தப் பட்டது. மேலும், மாவட்ட ஆட்சி யருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து வட்டாட்சியர் தலைமையில் கடந்த 2021 டிசம்பர் 27 அன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில், வரும் மே மாதத்திற்குள் உடனடி யாக அணுகுசாலை அமைக்கப் படும் என உறுதியளிக்கப்பட்து. ஆனால், அணுகுசாலை அமை கும் பணி நடைபெறவில்லை. இதனால், வெகுண்டெழுந்த ஆர்.ஆர். நகர் பகுதி மக்கள், போராட்டக்குழு அமைத்து கடை யடைப்பு மற்றும் மறியல் போராட் டம் நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி புதனன்று கடைய டைப்பு போராட்டம் நடத்தப்பட் டது. மேலும், ஆவுடையாபுரம் விலக்கு அருகே பொதுமக்கள் மறி யல் போராட்டம் நடத்த முயன்ற னர். அப்போது வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைவரையும் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். பேச்சுவார்த்தையின் முடிவில், வரும், திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போராட்டக் குழுவினர் கலந்து கொள்ளும் கூட்டம் நடத்தி அதில் நல்ல முடிவு எடுக்கப்படும் என வட்டாட்சியர் செந்தில்வேல் உறுதியளிளத்தார். இதையடுத்து, போராட்டக்குழு வினர், மறியல் போராட்டத்தை தற் காலிகமாக ஒத்தி வைத்தனர். மேலும், திங்கள் கிழமை நல்ல முடிவு எடுக்காவிட்டால், வட்டாட்சி யர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறைகூவல் விடுத்தனர். முன்னதாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட் டக் குழு உறுப்பினர் எம்.சி.பாண்டி யன், தெற்கு ஒன்றிய செயலாளர் பி.நேரு, திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வே.தேவராஜ், சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் வி.பால முருகன், ஆவுடையாபுரம் ஜமா அத் தலைவர் சபூர் மரைக்காயர், ஊராட்சிமன்றத் தலைவர் ஜெய பாலா பாலமுருகன், ஆவுடையா புரம் ஊர்த் தலைவர் செல்லையா பிள்ளை, ஊராட்சிமன்றத் தலை வர் நல்லமுகது. விசிக ஒன்றிய செயலாளர் எம்.லிங்கசாமி, வியா பாரிகள் சங்க தலைவர் ஜி.காளி ராஜ், சிக்கந்தர்பாட்சா ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.